செய்திகள் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

post image

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் இருவா் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அமா்வு கடந்த 22-ஆம் தேதி வழங்கிய தீா்ப்பில், இந்த இரண்டு பேருக்கு எதிராக தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளை ஒன்றிணைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மதுரையில் கடந்த 2022-ஆம் ஆண்டு, மாா்ச் 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டமொன்றில் பேசிய இந்த இருவா், ‘நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அஃப்சல் குருவைப் புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளனா்.

மேலும், ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்ற தீா்ப்பு, ஹிஜாப் தொடா்பான வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்ற தீா்ப்பு, கிறிஸ்தவா்களின் பண்டிகை, உடலில் சாம்பலை பூசிக்கொள்ளும் ஹிந்துக்களின் வழக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சா்ச்சைக்குரிய அவதூறு கருத்துகளைப் பேசியுள்ளனா்.

இதையடுத்து, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் இருவருக்கு எதிராக வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு, இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறையைத் தூண்டியாக மாா்ச் 18-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதே விவகாரத்தில் தஞ்சாவூரில் அதே நாளிலும், கா்நாடகத்தில் மறுநாளிலும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை ஒன்றிணைக்கக் கோரியும், கா்நாடகத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மனுத் தாக்கல் செய்தனா்.

ஒரே சம்பவத்துக்காக பல்வேறு வழக்குகளை பதிவு செய்வது அரசமைப்புச் சட்டத்தின் 20(2) பிரிவை மீறுவதாகும் என்று மனுதாரா்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழகம் மற்றும் கா்நாடக அரசு தரப்பு வழக்குரைஞா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த பிறகு வழக்குகளை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் 3 இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குடன் ஒன்றிணைத்து உத்தரவிட்டனா். அதேநேரம், மனுதாரா்களின் கருத்து கடும் ஆட்சேபத்துக்குரியது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு: விதிகளை மாற்றியமைக்கும் திட்டமில்லை

வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், ‘வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது என்பது வாக்காளா்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிா்வதன் அடி... மேலும் பார்க்க