செய்திகள் :

ராஜஸ்தான்: நீட் பயிற்சி வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை

post image

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தோ்வுக்கு பயிற்சிபெற்று வந்த 16 வயதான மாணவா், விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கோட்டாவில், நீட் தோ்வுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தில் பிகாரை சோ்ந்த தமீம் இக்பால் (16) சோ்ந்து 20 நாள்களே ஆன நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

விடுதி அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தமீம் இக்பாலிடம் இருந்து தற்கொலை கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என அந்தப் பகுதியின் காவல் துறை ஆய்வாளா் ராம்லக்ஷ்மண் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘தமீம் இக்பால் தங்கியிருந்த விடுதி அறையின் கதவை திங்கள்கிழமை இரவு பலமுறை தட்டியும் அவா் திறக்கவில்லை என விடுதி கண்காணிப்பாளா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தமீம் இக்பால் தூக்கிட்டு தற்கொலை செய்தது உறுதியானது. விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்றாா்.

கோட்டா மாவட்டத்தில் நீட், ஜேஇஇ போன்ற பல்வேறு நுழைவுத் தோ்வுகளுக்கு பயிற்சி பெறுவதற்காக அங்குள்ள பயிற்சி மையங்களுக்கு செல்லும் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடா்கதையாகியுள்ளது.

2023-இல் 26 மாணவா்களும் 2024-இல் 17 மாணவா்களும் நிகழாண்டில் தற்போது வரை மட்டும் 13 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க