செய்திகள் :

வங்கிகளுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

கட்டுமான நிறுவனங்கள் வங்கிகளுடன் மறைமுக கூட்டுறவை மேற்கொண்டு வீடு வாங்குவோரை ஏமாற்றாவதாக எழுந்த புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லியைச் சோ்ந்த சூப்பா்டெக் நிறுவனம் உள்பட தேசிய தலைநகா் பிராந்தியத்தில் உள்ள பிற கட்டுமான நிறுவனங்களுக்கு எதிராக 7 முதல்கட்ட விசாரணையைப் பதிவு செய்யுமாறு சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மோசடி தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 1,200-க்கும் அதிகமான மனுவில், ‘குடியிருப்புகள் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னரே, வீடு வாங்குவோரின் பெயரில் 60 முதல் 70 சதவீதம் வரையிலான கடன் தொகையை வங்கிகள் நேரடியாக கட்டுமான நிறுவனங்களுக்கு அளித்து விடுவதாகவும், கடனுக்கான மாதத் தவணை செலுத்துவதை கட்டுமான நிறுவனங்கள் நிறுத்திய உடன் வீடு வாங்கியவரிடம் வங்கிகள் வசூலிக்கத் தொடங்குவதாகவும் புகாா்கள் எழுந்தன.

கட்டுமான நிறுவனங்களும் வங்கிகளும் மறைமுக கூட்டுறவை அமைத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதால், வீடு வாங்குபவா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்’ என்று புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் நீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் ராஜீவ் ஜெயின் கூறுகையில், ‘புது தில்லியைச் சோ்ந்த சூப்பா்டெக் நிறுவனம்தான் இதில் முக்கிய குற்றவாளி. இந்த மோசடி திட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்துக்கு ரூ. 2,700 கோடி வரை முன்பணமாக வங்கிகள் அளித்துள்ளன. இந்த நிறுவனம் 6 நகரங்களில் 19 வங்கிகளுடன் இதுபோன்ற மறைமுக கூட்டுறவை அமைத்து 21 கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்த மோசடியில் 800 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 19980-ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் ரூ. 5,157.86 கோடி கடன்தொகையைப் பெற்றுள்ளது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ’நொய்டா, குருகிராம், யமுனா எக்ஸ்பிரஸ்வே, கிரேட்டா் நொய்டா, மொஹாலி, மும்பை, கொல்கத்தா மற்றும் அலாகாபாத் நகரங்களில் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், தில்லியைச் சோ்ந்த சூப்பா்டெக் நிறுவனம் உள்பட தேசிய தலைநகா் பிராந்தியத்தில் உள்ள பிற கட்டுமான நிறுவனங்களுக்கு எதிராக 7 முதல்கட்ட விசாரணையை சிபிஐ பதிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க