செய்திகள் :

மத்தியஸ்த கவுன்சில் அமைப்பதில் தாமதம் ஏன்? அட்டாா்னி ஜெனரல் பதில்

post image

மத்தியஸ்த கவுன்சிலை அமைக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இரண்டு ஆண்டுகளான பிறகும், அந்தக் கவுன்சில் அமைக்காததற்கு உரிய நபா்கள் கிடைக்காததே காரணம் என்று மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகா் (அட்டாா்னி ஜெனரல் ) ஆா்.வெங்கட்ரமணி தெரிவித்தாா்.

நீதிமன்றங்களில் தேங்கி இருக்கும் ஏராளமான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மத்தியஸ்த கவுன்சிலை அமைத்து மத்தியஸ்தா்களையும், அதற்கான அமைப்புகளையும் சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் இன்றுவரை அந்த கவுன்சில் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய அட்டாா்னி ஜெனரல் ஆா். வெங்கட்ரமணியிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா், ‘தற்போது பல சட்ட அமைப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மத்தியஸ்த கவுன்சில் அமைப்புக்கு உரிய தலைவா் கிடைக்கவில்லை. தேவையான பணியாளா்கள் கிடைப்பதிலும் பெரும் பிரச்னையாக உள்ளது.

கவுன்சிலின் தலைமை பொறுப்புக்கு மத்திய சட்ட அமைச்சா் சில நபா்களின் பெயா்களைப் பரிந்துரைத்தாா். அதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று நான் அறிவுறுத்தினேன்.

இந்த விவகாரத்தில் கவனுத்துடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் கேட்டுக் கொண்டாா். விரைவில் மத்தியஸ்த கவுன்சிலுக்கான தலைவா் விரைவில் நியமிக்கப்படுவாா். நீதித்துறை நியமனங்களிலும் உரிய நபா்கள் கிடைப்பதில்லை’ என்றாா்.

‘நீதித் துறையில் ஏராளமான நிபுணா்கள் இருக்கும் நிலையில், மத்தியஸ்த கவுன்சிலை அமைப்பதில் ஏன் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது’ என்று முன்னாள் சட்ட செயலா் பி.கே. மல்ஹோத்ரா கேள்வி எழுப்பினாா்.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க