செய்திகள் :

புதுக்கோட்டை: SI-யை மிரட்டி 10 பவுன் நகை பறிப்பு; 3 தனிப்படை அமைத்து விசாரிக்கும் போலீஸ்

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வருபவர் சுமையா பானு.

இவரது கணவர் நாகலிங்கம். இவர், திருமயம் பெல் ஆலையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை அருகே உள்ள சணப்பட்டியில் நாகலிங்கம், சுமையா பானு தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சொந்த வேலையாக ஆந்திராவில் உள்ள காளகஸ்தி சென்று நேற்று முன்தினம் வீடு திரும்பினர். அப்போது, நள்ளிரவில் வீட்டிற்குள் கொள்ளையர்கள் 3 பேர், வீட்டின் பின்பக்கமாகச் சுவர் ஏறிக் குதித்து நுழைந்தனர்.

படுக்கையறையில் கொள்ளையர்கள் இரும்பு ராடுடன் நுழைந்து நாகலிங்கத்தைத் தாக்கி நகை, பணத்தைக் கேட்டனர். மேலும், எஸ்.ஐ-யைுயம் மிரட்டி நகைகளைக் கேட்டனர்.

இதனால், அவர்கள் இருவரும் பயத்தில் தாங்கள் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் என 10 பவுன் நகைகளைக் கழற்றி கொடுத்தனர்.

அதை அவர்கள் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வீட்டின் பின்பக்கம் ஏறிக்குதித்து அங்கிருந்த தைலமரக்காடு வழியாகத் தப்பியோடினர்.

கொள்ளையர்கள் 3 பேரும் முகத்தில் துணியால் மறைத்து, சாரத்தைத் தொடைக்கு மேல் சுற்றிக் கட்டியும், சட்டை அணியாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

couple

சம்பவம் நடந்த வீட்டைப் புதுக்கோட்டை எஸ்.பி அபிஷேக் குப்தா பார்வையிட்டார். அவரது உத்தரவின் போில் அமைக்கப்பட்ட 3 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோப்ப நாய் தீரன் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து, சிறிது தூரம் ஓடி நின்றது. இந்த கொள்ளை சம்பவம் தொடா்பாக திருக்கோகா்ணம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதோடு, தப்பியோடிய கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வருபவரிடமே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம், பொதுமக்களை மட்டுமல்லாமல், காவல்துறையினரையும் அதிர வைத்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

கரூர்: வழக்கறிஞரைத் தாக்கி பணம், நகைகள் கொள்ளை; சக வழக்கறிஞர் உள்பட 3 பேர் கைது; என்ன நடந்தது?

கரூர், சுங்ககேட் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வழக்கறிஞரான இவர் தனது வீட்டிலிருந்தபோது இவரது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 3 நபர்கள் புகுந்துள்ளனர்.அதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால், ஆறுமுக... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பாஜக பிரமுகரை காவு வாங்கிய பாரதியார் நிலம்!’ - பழிக்குப் பழியா… பகைக்கான விலையா ?

விபசார வழக்கில் கைதுபுதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். காங்கிரஸ், ம.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.கவில் அகில இந்திய OBC பிர... மேலும் பார்க்க

தேனி : போலி நகை விற்பனை செய்தவர் கொன்று புதைப்பு; 7 பேர் கைது - நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40). இவரும் இவரது சகோதரி மகன் கழுவா என்பவரும் (37) தேனி மாவட்டத்தில் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.... மேலும் பார்க்க

பணிப்பெண்ணிடம் கூடுதல் சாவி; நடிகை நேகா வீட்டில் மாயமான ரூ.34 லட்சம் மதிப்பிலான நகை - வழக்கு பதிவு

பாலிவுட் நடிகை நேகா மாலிக், மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் ஷானாஸ் முஸ்தபா ஷேக் என்ற பெண் வேலை செய்து வந்தார். நடிகை நேகா அடிக்கடி பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடியவர் என்ப... மேலும் பார்க்க

MyV3Ads: `பணம் கிடைக்கவில்லை என்றால்...' - காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலையிடமாகக் கொண்டு MyV3Ads என்கிற நிறுவனம் இயங்கி வந்தது. APP -ல் விளம்பரம் பார்த்தால் பணம் என்று மக்களிடம் நூதன முறையில் ஆசையைத் தூண்டியது. அதை நம்பி தென்னிந்தியா முழுவதும் இருந்து ... மேலும் பார்க்க

தமிழகத்தை உலுக்கிய கண்ணகி, முருகேசன் ஆணவக் கொலை; புகாரை கூட ஏற்காத போலீஸ் - வழக்கு கடந்து வந்த பாதை

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர... மேலும் பார்க்க