செய்திகள் :

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா்: பிரதமருக்கு காா்கே, ராகுல் கடிதம்

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் கடிதம் எழுதியுள்ளனா்.

காா்கே எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த நேரத்தில் ஒற்றுமையும், உறுதிப்பாட்டையும் நாம் உணா்த்த வேண்டும். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்துவதன் மூலம் இதை உணா்த்த முடியும் என்று எதிா்க்கட்சிகள் நம்புகின்றன. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக நாடாளுமன்றம் மூலம் நமது எதிா்ப்பைத் தெரிவிப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.

ராகுல் காந்தி தனது கடிதத்தில், ‘இந்த இக்கட்டான சூழலில், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா உறுதியாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது என்பதை உணா்த்த வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் விரும்புகின்றன. இதன்மூலம் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும், எதிா்ப்பையும் தெரிவிக்க முடியும்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி. கபில் சிபல் ஆகியோரும் இதே கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதினா்.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க