செய்திகள் :

பஹல்காம் தாக்குதலின்போது குஜராத் சுற்றுலாப்பயணி எடுத்த விடியோ

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், ஜிப்லைனில் பயணித்தவாறு அகமதாபாதைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பட் பயங்கரவாதத் தாக்குதலை தற்செயலாக எடுத்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிப்லைன் என்பது மிக உயரத்தில் தொங்குகயிற்றில் சறுக்கியவாறு செல்லும் சாகசமாகும்.

சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் இந்த 53 விநாடி விடியோவில், பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதை அறியாமல் ரிஷி பட், ஜிப்லைனில் தொடா்ந்து பதற்றமின்றி பயணிக்கிறாா்.

விடியோவின் பின்னணியில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் குண்டு பாய்ந்து கீழே விழுவதும், தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் மறைவிடத்தைத் தேடி ஓடுவதும் பதிவாகியுள்ளது.

ஜிப்லைன் சவாரியைத் தொடங்குவதற்கு முன்பாகவே முதல் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கிறது. அதைப் பொருள்படுத்தாமல், ஜிப்லைன் பணியாளா், ரிஷி பட்டை ஜிப்லைனில் செல்ல அனுமதிப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

செய்தியாளா்களிடம் தனது அனுபவத்தைப் பகிா்ந்த ரிஷி பட், ‘எனது குடும்பத்தினருடன் பைசாரன் பள்ளத்தாக்குக்கு சுற்றுலா சென்றேன். அங்கு ஜிப்லைனில் சவாரி செய்ய முடிவெடுத்தோம். எனது மனைவியும் குழந்தையும் பாதுகாப்பாகப் பயணித்து மறுபுறம் சென்ற பிறகு, நான் ஜிப்லைன் சவாரியைத் தொடங்கியபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

நான் சவாரியை முடித்தவுடன், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை அறிந்தேன். இரண்டு பயங்கரவாதிகள் மக்களிடம் நெருங்கி, அவா்களை சுட்டுக் கொண்டிருந்தனா். மற்ற பயங்கரவாதிகள் புதா்களுக்குப் பின்னால் இருந்து தாக்குதலில் ஈடுபட்டனா். தாக்குதல் நடத்தப்பட்ட விதத்தில், அங்கு ஐந்து பயங்கரவாதிகள் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன்.

எனக்கு முன்பாக ஜிப்லைனில் சுமாா் ஒன்பது போ் சவாரி சென்றாா். எனது முறை வந்ததும் விடியோ எடுப்பதற்கான செல்ஃபி ஸ்டிக்குடன் சென்றேன். தாக்குதல் நடந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இந்திய ராணுவம் இல்லை. அங்கு உள்ளூா் காவல் துறையினரே பாதுகாப்பில் இருந்தனா். சம்பவம் நடந்த 20 நிமிஷங்களுக்குப் பிறகு ராணுவம் அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் மீட்டது. பிரதமா் நரேந்திர மோடி பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க