செய்திகள் :

இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

post image

இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

மேலும், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டதுடன், பாகிஸ்தானிலுள்ள இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியர்களைத் திருமணம் செய்து பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் பாகிஸ்தான் நாட்டினரும் தங்களது குடும்பங்களை விட்டு பிரிந்து தாயகம் திரும்பும் சூழலிலுள்ளனர்.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு கருணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரான மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:

‘இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட வேண்டும் எனும் மத்திய அரசின் திட்டம், மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. அதிலும், குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர்களைத் திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்து வரும் ஏராளமான பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் மக்களை நாடு கடத்துவது அவர்களது குடும்பத்தில் மிகப் பெரியளவிலான பாதிப்புகளை உருவாக்கக் கூடும். எனவே, அரசு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிப்படையாத வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, முன்னாள் கிளர்ச்சியாளர்களைத் திருமணம் செய்து கொண்ட ஏராளமான பாகிஸ்தான் பெண்கள் கடந்த 2013-ம் ஆண்டு முதல்வர் ஒமர் அப்துல்லா கொண்டு வந்த திட்டத்தின் மூலம் ஜம்மு - காஷ்மீரில் குடியேறியுள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் ஆகியப் பகுதிகளுக்குச் சென்று தீவிரவாத செயல்களில் ஈடுபட்டோர் சரணடைந்து மறுவாழ்வு பெறும் வகையிலான திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

மே 29-ல் விண்வெளி மையத்துக்குச் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மே 29-ஆம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: முப்படைகளுக்கு முழு சுதந்திரம் - மோடி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடா்பான முடிவுகளை மேற்கொள்ள முப்படைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளார். மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்திற்குச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டு இந்தியாவ... மேலும் பார்க்க

மே 14-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கிறார் பி.ஆர். கவாய்!

உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக மே 14 ஆம் தேதி, பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்கிறார்.புதிய தலைமை நீதிபதியாக கவாய் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்திருந்தார். இந்தப... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தானம்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அவரது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகன் என... மேலும் பார்க்க

ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்கும் பாக்., முன்னாள் எம்.பி.! இந்தியாவில் இருக்க அனுமதி!

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தபயா ராம், ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்று தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். இவரின் குடும்பத்தில் 34 உறுப்பினர்கள் உள்ள நிலையில், 6 பேர் மட்டுமே இந்தியக் குடியுரி... மேலும் பார்க்க