செய்திகள் :

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தானம்!

post image

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அவரது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகன் என்றும் அழைக்கப்பட்ட ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியன்று காலமானார்.

இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு அரசு சார்பில் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, பான் அட்டை, பயண விவரக் குறிப்புகள், பல்வேறு பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றிய உரைகள் உள்ளிட்ட தனிப்பட்ட ஆவணங்களை அவரது குடும்பத்தினர் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு தானமாக வழங்கினர்.

இதுகுறித்து, அவரது உறவினரான ஏ.பி.ஜே.எம். நஸீமா மரைக்காயர், ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் சலீம் மற்றும் தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநர் அருண் சிங்கால் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ரூ.1 லட்சம்! அரசு அதிரடி அறிவிப்பு!

மே 29-ல் விண்வெளி மையத்துக்குச் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மே 29-ஆம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: முப்படைகளுக்கு முழு சுதந்திரம் - மோடி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடா்பான முடிவுகளை மேற்கொள்ள முப்படைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளார். மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்திற்குச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டு இந்தியாவ... மேலும் பார்க்க

மே 14-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கிறார் பி.ஆர். கவாய்!

உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக மே 14 ஆம் தேதி, பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்கிறார்.புதிய தலைமை நீதிபதியாக கவாய் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்திருந்தார். இந்தப... மேலும் பார்க்க

ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்கும் பாக்., முன்னாள் எம்.பி.! இந்தியாவில் இருக்க அனுமதி!

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தபயா ராம், ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்று தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். இவரின் குடும்பத்தில் 34 உறுப்பினர்கள் உள்ள நிலையில், 6 பேர் மட்டுமே இந்தியக் குடியுரி... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றால் ரூ.1 லட்சம்! அரசு அதிரடி அறிவிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப் பெறும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.சத்தீஸ்கரில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி... மேலும் பார்க்க