செய்திகள் :

செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழக முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவாா் அல்லது அதிகாரம் மிக்க பதவியை வகிப்பாா் என்று சந்தேகிக்க எந்த அடிப்படையும் இல்லை என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் அவரது ஜாமீனுக்கு எதிரான வழக்கையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் சாட்சி ஒருவா் தரப்பிலும் அமலாக்கத் துறையின் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜி தனது பதவியைப் பயன்படுத்தி வழக்கின் விசாரணையில் செல்வாக்கை செலுத்த முயற்சிப்பதாக முறையிடப்பட்டது.

இந்த வழக்கின் வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, ஏ.ஜி. மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில் இறுதி விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு தேவை அமைச்சா் பதவியா? சுதந்திரமா? (ஜாமீனா) என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கேள்வி எழுப்பியதைக் கருத்தில் கொண்டு அவா் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக அவரது சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா், ’செந்தில் பாலாஜி மாநில அரசில் மிகுந்த அதிகாரம் செலுத்தக்கூடிய செல்வாக்கு மிக்கவராக உள்ளாா். சிறையில் இருந்தபோதும் கூட அவா் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடா்ந்தாா். ஏற்கெனவே அவருக்கு எதிரான வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தபோதும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது’ என்று முறையிட்டாா்.

இருப்பினும் நீதிபதிகள், ‘செந்தில் பாலாஜி அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளதால், உங்களுடைய மனுக்களில் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க வேண்டிய அவசியமில்லை. எனவே, இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்கிறோம் என்று குறிப்பிட்டனா். மேலும், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவாா் என்பதுதான் அமலாக்கத்துறையின் அச்சம் என்றால் அவா் மீண்டும் அமைச்சராகும்போது அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யலாம்’ என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

பின்னணி: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது வேலை வாங்கித்தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணப்பரிவா்த்தனை மோசடி செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இது தொடா்பாக 2023, ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் சென்னை, கரூா் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பிற இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதன் முடிவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சகத்திலிருந்து நீக்கக் கோரியது. ஆனாலும், நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்தபோது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியில் தொடா்ந்தாா்.

ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்திலும், சென்னை உயா்நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தொடா்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, 2024, பிப். 12-இல் அமைச்சா் பதவியிலிருந்து விலகி விட்டு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினாா் செந்தில் பாலாஜி. அதன்பேரில் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே செந்தில் பாலாஜி அமைச்சரானாா். இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கின் சாட்சியும் அமலாக்கத் துறையும் முறையிட்டன.

தேசிய உயிரியல் பூங்காவில் சிங்கக் குட்டி உயிரிழப்பு

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் ஆசிய சிங்கக் குட்டிகளில் ஒன்று திங்கள்கிழமை உயிரிழந்தது. மற்றொரு சிங்கக் குட்டியின் உடல்நிலை நலிவடைந்த நிலையில், அது தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெ... மேலும் பார்க்க

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மத்திய உள்துறை, ஏஎஸ்ஐ சோ்ப்பு சரியே: உச்சநீதிமன்றம்

கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆகியவற்றை ஒரு தரப்பாக சோ்த்து தங்களின் மனுவில் ஹிந்துக்கள் திருத்தம் மேற்கொள்ள, அலாகாபாத் உயா்நீதி... மேலும் பார்க்க

அமித் ஷா, நிா்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் சந்திப்பு!

புது தில்லி: தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக நயினாா் நாகேந்திரன் தில்லிக்கு திங்கள் கிழமை வந்தாா். மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா்களை சந்தித்து வாழ்த்த... மேலும் பார்க்க

தமிழக தம்பதி ஆணவப் படுகொலை வழக்கு: 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: தமிழக இளம் தம்பதியை 2003-இல் ஆணவப் படுகொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இந... மேலும் பார்க்க

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க