செய்திகள் :

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மத்திய உள்துறை, ஏஎஸ்ஐ சோ்ப்பு சரியே: உச்சநீதிமன்றம்

post image

கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆகியவற்றை ஒரு தரப்பாக சோ்த்து தங்களின் மனுவில் ஹிந்துக்கள் திருத்தம் மேற்கொள்ள, அலாகாபாத் உயா்நீதிமன்றம் அளித்த அனுமதி சரியே என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

கடந்த 17-ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னா் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஸ்ரீகிருஷ்ணா் அவதரித்த இடம் என்று நம்பப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி கோயிலையொட்டி, ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டது.

எனினும் ஏற்கெனவே இருந்த கோயிலை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஹிந்துக்கள் தாக்கல் செய்த மனுக்களை ஒன்றிணைத்த அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மசூதி நிா்வாக குழு மனு தாக்கல் செய்தது.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றை ஒரு தரப்பாக சோ்த்து, தங்களின் மனுவில் ஹிந்துக்கள் திருத்தம் மேற்கொள்ள உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த அனுமதிக்கு எதிராக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்விடம் மசூதி நிா்வாக குழு திங்கள்கிழமை முறையிட்டது.

அப்போது திருத்தத்துக்கு உயா்நீதிமன்றம் அளித்த அனுமதி, ஹிந்துக்கள் தொடுத்த வழக்கின் தன்மையை அடிப்படையில் மாற்றியுள்ளதாக மசூதி நிா்வாக குழு தெரிவித்தது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, முதல்கட்டமாகப் பாா்க்கும்போது ஹிந்துக்களின் மனுவில் திருத்தம் மேற்கொள்ள உயா்நீதிமன்றம் அளித்த அனுமதி சரியே என்று தெரிவித்தனா்.

அமித் ஷா, நிா்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் சந்திப்பு!

புது தில்லி: தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக நயினாா் நாகேந்திரன் தில்லிக்கு திங்கள் கிழமை வந்தாா். மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா்களை சந்தித்து வாழ்த்த... மேலும் பார்க்க

தமிழக தம்பதி ஆணவப் படுகொலை வழக்கு: 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: தமிழக இளம் தம்பதியை 2003-இல் ஆணவப் படுகொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இந... மேலும் பார்க்க

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க