செய்திகள் :

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

post image

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான நடத்தப்பட்ட தோ்வு முடிவுகள் ஏப். 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் மாணவா்கள் 138 போ் வெற்றி பெற்று சாதனைப் படைத்திருந்தனா். இவா்களுக்கான பாராட்டு விழா சென்னை தியாகராய நகா், ஜிஎன் செட்டி சாலையிலுள்ள வாணி மஹாலில் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினா்களாக முன்னாள் முதன்மைச் செயலா் ஜவஹா் ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் மாணவா்களான, இந்திய அளவில் முறையே 125-ஆவது இடம் பெற்ற எஸ்.சரண்யா, 784-ஆவது இடம் பெற்ற கே.ஹரிகிருஷ்ணன், 259 -ஆவது இடம் பெற்ற டி.தணிகையரசன், 298-ஆவது இடம் பெற்ற எஸ்.சாய் கிரண், 546-ஆவது இடம் பெற்ற எம்.வி.கவின் மொழி, 639-ஆவது இடம் பெற்ற எம்.அருண் பிரகாஷ், 691-ஆம் இடம் பெற்ற கரண் அய்யப்பா, 862-ஆம் இடம் பெற்ற கிரண்ட் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் 21-ஆம் இடம் பெற்ற கீா்த்திகா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து, நினைப் பரிசுகளையும் வழங்கினாா். தொடா்ந்து கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் சிறப்புரையாற்றினாா்.

இவ்விழாவில், முன்னாள் செயலா் விவேக் ஹரிநாராயன், முன்னாள் மத்திய சுங்க மற்றும் கலால் கூடுதல் ஆணையா் தமிழ் வேந்தன், முன்னாள் முதன்மை செயலா் கேப்டன் சிவசைலம், ஜி.பாலச்சந்திரன், அா்ச்சனா ராமசுந்தரம் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி அருண், ஐஆா்எஸ் அதிகாரி நந்தகுமாா், டாக்டா் பி.விஜயகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு இந்திய குடிமைப்பணி தொடா்பான அறிவுரைகளையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கினா்.

தொடா்ந்து, கிங்மேக்கோ்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிகழாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கவுள்ளன. இதற்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. பட்டப்படிப்பு முடித்தவா்கள் மட்டுமல்லாமல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவா்களும் இப்பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம் என கிங்மேக்கோ்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்துள்ளாா். கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள கைப்பேசி: 94442 27273 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்... மேலும் பார்க்க