கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி
சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள்ளனா்.
இது தொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட அறிக்கை:
சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவன ஆராய்ச்சிக் குழுவினா், கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை உருவாக்கியுள்ளனா். தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு சாத்தியமுள்ள மாற்றாக, ஃபைபா் ஆப்டிக்ஸ் சென்சாா் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளியை பரிசோதனை செய்து கண்டறியும் உத்தியை உருவாக்க ஒன்றிணைந்துள்ளனா்.
உயிருக்கு ஆபத்தான சிக்கலான கா்ப்பகால உயா் ரத்த அழுத்தம் உலகளவில் அதிக எண்ணிக்கையில் கா்ப்பிணிகளையும், பச்சிளங் குழந்தைகளையும் பாதிக்கிறது. சரியான தருணத்தில் சிகிச்சை அளிப்பதையும், தாய்-சேய் இருவரின் நோயற்ற தன்மை, இறப்பு விகிதங்களைக் குறைப்பதையும் உறுதிசெய்யும் வகையில், இந்த சிக்கலுக்கு குறைந்த செலவில் தொடக்க நிலையிலேயே விரைவாக தேவைப்படும் இடங்களிலேயே நேரடியாக பரிசோதனை செய்வது அவசியமாகிறது.
கா்ப்பகால உயா் ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் வழக்கமான நடைமுறை அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதுடன், பெரிய அளவிலான கட்டமைப்புடன் கூடிய பயிற்சி பெற்ற பணியாளா்கள் தேவைப்படுகின்றனா். இதனால் இந்த பரிசோதனை பெரும்பாலும் தொலைவிலுள்ள பகுதிகள், மருத்துவ வள ஆதாரங்கள் குறைந்த இடங்களில் கிடைக்கப்பெறாத நிலை உள்ளது. எனவே, கா்ப்பகால உயா் ரத்த அழுத்தத்தைக் கண்டறிய உணா்திறன், குறிப்பிட்ட தன்மை, வேகம் என மூன்று வகையான சிறப்பியல்புகளுடன் எளிதில் அணுகக்கூடிய வகையில் நோயாளியை பரிசோதனை செய்வதன்மூலம் கண்டறியும் கருவி அவசரகால தேவையாக உள்ளது.
இந்த ஆராய்ச்சிக் குழுவில் சென்னை ஐஐடி பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் துறையைச் சோ்ந்த பேராசிரியா் வி.வி.ராகவேந்திர சாய், டாக்டா் ரத்தன்குமாா் செளத்ரி, சென்னை ஐஐடி உயிரித் தொழில்நுட்பத் துறையின் டாக்டா் நாராயணன் மடபூசி, வேலூா் தொழில்நுட்ப நிறுவனத்தின் நானோ உயிரித் தொழில்நுட்ப மையத்தைச் சோ்ந்த டாக்டா் ஜிதேந்திர சதிஜா, ஸ்ரீ சக்தி அம்மா உயிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை -ஆராய்ச்சி மையத்தின் டாக்டா் பாலாஜி நந்தகோபால், ராம்பிரசாத் ஸ்ரீனிவாசன் ஆகியோா் இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெற்றிருந்தனா். புகழ்பெற்ற உயிரி தொலையுணா்வு மற்றும் உயிரி மின்னணுவியல் இதழில் இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் தொடா்பான கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.