உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!
கனடாவில் வாக்குப்பதிவு முடிந்தது: தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!
கனடாவில் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் திங்கள்கிழமை(ஏப். 28) நடைபெற்றது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(ஏப். 29) காலை வாக்குப்பதிவு அனைத்து பகுதிகளிலும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
கனடாவில் பிரதமா் மாா்க் காா்னேயின் லிபரல் கட்சிக்கும், பியா் பாய்லியெவ்ரே தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவிய இந்தத் தோ்தலில், லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கனடா ஒளிபரப்பு கழகமான ‘சிபிசி’ அறிவித்துள்ளது. எனினும், தனி பெரும்பான்மையுடன் அக்கட்சி அரசு அமைக்குமா என்பது இன்றிரவு வெளியாகும் தேர்தல் முடிவுக்குப் பின்னரே தெரிய வரும்.