செய்திகள் :

'மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி...' - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

post image

கடந்த மாதம் மார்ச் 14-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார்.

திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு அடைந்திருக்கக்கூடிய உயரத்தின் அளவையும், சாதனைகளையும் இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கு பட்டியலிட்டு சொல்ல விரும்புகிறேன் என்று பேச தொடங்கிய ஸ்டாலின், "2024- 2025 ஆண்டில் இந்தியாவில் நம்பர் 1 ஆக தமிழ்நாடு 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்தது கிடையாது. இதனை நான் சொல்லவில்லை.  எல்லா வகையிலும் தமிழ்நாட்டிற்கு என்றால் ஓரவஞ்சனையுடன் செயல்படும் ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது. கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை உள்ளது.

உயர் கல்வியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் 47 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.  தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் இருப்போர் 1.43 சதவிகிதம் மட்டுமே. மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளையும் தாண்டி, சாதனை படைத்து வருகிறோம்.

இது தனிமனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. சுயமரியாதை, சமூக நீதி, மதசார்பின்மை என அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலம் என்ற நிலைக்கு உழைக்கிறோம்.

ஸ்டாலின் கேட்கும் 3 கேள்விகள்
ஸ்டாலின் கேட்கும் 3 கேள்விகள்

என் 60 ஆண்டுகால பொதுவாழ்வு குறித்து ஸ்டாலின் என்றால் 'உழைப்பு உழைப்பு உழைப்பு' என கலைஞர் முன்னதாக கூறியிருந்தார். கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் 'சாதனை சாதனை சாதனை' எனக் கூறியிருப்பார்.

கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன். கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள்” என்று  பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"தீண்டாமை குறியீடு... இனி `காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்படும்" - ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்றளவும் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியை மட்டும் சாதிய அடையாளத்தின் அடிப்படையில் `காலனி' என்று அழைக்கப்படுகிறது. ஊர்ப் பகுதி - சித்தரிப்புப் படம்அரச... மேலும் பார்க்க

NCERT: 7ம் வகுப்பு பாடத்தில் முகலாயர், டெல்லி சுல்தான்கள் நீக்கம்; பாடத்திட்ட மாற்றங்கள் ஒரு பார்வை

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), 2025-26 கல்வியாண்டிற்கான 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்தியமைத்து, டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்களை ... மேலும் பார்க்க

`அடுத்து துரைமுருகன், ஐ.பெரியசாமி விக்கெட் விழலாம்; பார்த்து ரசிங்க முதல்வரே..!’ - ஹெச்.ராஜா பேச்சு

அம்பேத்கர் ஜெயந்தி கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, "காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டார்கள், தற்போது அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ... மேலும் பார்க்க

'என்னை சுடுங்கள்; ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் அனுப்பாதீங்க' - கதறும் பெண்மணி; பின்னணி என்ன?

ஒடிசா பலசோர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார் பாகிஸ்தானை சேர்ந்த 72-வயது பெண்மணி. இவரது அப்பா பீகாரை சேர்ந்தவர். பல்வேறு காரணங்களால் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார். அவரது ... மேலும் பார்க்க

Pahalgam Attack: 'ஒருதலைபட்சமான, சட்டவிரோத நடவடிக்கை' - பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா

கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று இந்தியா வலுவாக சந்தேகிக்க... மேலும் பார்க்க

Pahalgam Attack: ஷோயப் அக்தரின் சேனல் உட்பட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை; காரணம் என்ன?

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் நா... மேலும் பார்க்க