செய்திகள் :

"தீண்டாமை குறியீடு... இனி `காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்படும்" - ஸ்டாலின் அறிவிப்பு

post image

தமிழ்நாட்டில் இன்றளவும் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியை மட்டும் சாதிய அடையாளத்தின் அடிப்படையில் `காலனி' என்று அழைக்கப்படுகிறது.

ஊர்ப் பகுதி - சித்தரிப்புப் படம்
ஊர்ப் பகுதி - சித்தரிப்புப் படம்

அரசு ஆவணங்களிலுமே அவர்கள் வாழும் பகுதியின் முகவரி ஊர் பெயரோடு சேர்த்து காலனி என்றே பதிவாகியிருக்கிறது.

இந்த நிலையில், இத்தகைய வழக்கைத்தை மாற்றும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பைச் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஸ்டாலின், "இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் இது மாறியிருப்பதால், இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்தும் பொதுப்புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறினார்.

'மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி...' - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

கடந்த மாதம் மார்ச் 14-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார். திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு ... மேலும் பார்க்க

NCERT: 7ம் வகுப்பு பாடத்தில் முகலாயர், டெல்லி சுல்தான்கள் நீக்கம்; பாடத்திட்ட மாற்றங்கள் ஒரு பார்வை

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), 2025-26 கல்வியாண்டிற்கான 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்தியமைத்து, டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்களை ... மேலும் பார்க்க

`அடுத்து துரைமுருகன், ஐ.பெரியசாமி விக்கெட் விழலாம்; பார்த்து ரசிங்க முதல்வரே..!’ - ஹெச்.ராஜா பேச்சு

அம்பேத்கர் ஜெயந்தி கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, "காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டார்கள், தற்போது அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ... மேலும் பார்க்க

'என்னை சுடுங்கள்; ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் அனுப்பாதீங்க' - கதறும் பெண்மணி; பின்னணி என்ன?

ஒடிசா பலசோர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார் பாகிஸ்தானை சேர்ந்த 72-வயது பெண்மணி. இவரது அப்பா பீகாரை சேர்ந்தவர். பல்வேறு காரணங்களால் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார். அவரது ... மேலும் பார்க்க

Pahalgam Attack: 'ஒருதலைபட்சமான, சட்டவிரோத நடவடிக்கை' - பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா

கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று இந்தியா வலுவாக சந்தேகிக்க... மேலும் பார்க்க

Pahalgam Attack: ஷோயப் அக்தரின் சேனல் உட்பட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை; காரணம் என்ன?

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் நா... மேலும் பார்க்க