செய்திகள் :

புதிய போப் யார்? மே 7 கார்டினல்கள் குழு கூடுகிறது!

post image

ரோம்: புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் மே 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21 ஆம் தேதி காலமானார். போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப். 26 ஆம் தேதி புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற பின்னர் அவரது விருப்பப்படி புனித மேரி தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் மே 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

வாடிகன் நகரில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் ஆலோசனை கூட்டமும், ரகசிய வாக்கெடுப்பும் நடைபெறும். இதற்கான பணிகளுக்காக சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் பணியாளர்கள் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியிருப்பதால், திங்கள்கிழமைமுதல் அங்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலுமிருந்து கத்தோலிக்க திருச்சபையில் போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பிரதிநிதித்துவம் பெற்ற காா்டினல்கள் (கத்தோலிக்க மத குருக்கள் - சிவப்பு நிற தொப்பியணிந்த கிறிஸ்தவ மத குருமாா்கள்) மற்றும் மறைந்த போப் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் உள்பட மொத்தம் 135 பேர் சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் மே மாதம் ஒன்றுகூடி, தனி அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவர். அப்போது வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் தேவாலய கதவுகள் மூடப்பட்டுவிடும், தொடர்ந்து ரகசிய காப்பு பிரமாணத்தை அவர்கள் எடுத்துக்கொள்வர். அதன்பின் அடுத்தக்கட்டமாக நடைபெறும் வாக்கெடுப்பில் பங்கேற்பர்.

புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான கால வரம்பு இல்லையெனினும் இந்த பணிகள் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவாலயத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் புகையை வெளியேற்றி முடிவுகள் அறிவிக்கப்படும். கரும்புகை வெளியானால், புதிய போப் இன்னும் தோ்வாகவில்லை என்றும் வெள்ளை புகை வெளியானால், புதிய போப் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்றும் பொருளாகும்.

புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்க தகுதிப் பெற்ற 135 கர்டினால்களில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த பேராயர் ஃபிளிப்பே நெரி ஃபெர்ராரோ (வயது 72), ஹைதரபாத்தைச் சேர்ந்த கார்டினல் அந்தோனி பூலா (63), கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு (51) மற்றும் பசேலியோஸ் கிளேமிஸ் (65) ஆகிய 4 இந்திய கர்டினால்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

நடிகர் ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு, திரைத்துறையில் அவர் படைத்த சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட உள்ளார். நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், பாடகர், முக்கியமாக சண்டைக் க... மேலும் பார்க்க

கனடா பிரதமராகும் மார்க் கார்னே! அமெரிக்காவுடனான உறவுக்கு முடிவு என அறிவிப்பு!

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னே பதவியேற்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தேசம்: சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தோலுரித்த இந்தியா!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தேசம் என்று கடுமையான சொற்களால் ஐ.நா. அவையில் இந்தியா விமர்சித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் ’வோட்டான்’ என்படும் பயங்கரவாதத் தொடர்பு குழுக்களால் பாதிக்கப்பட்டோர... மேலும் பார்க்க

கனடாவில் வாக்குப்பதிவு முடிந்தது: தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

கனடாவில் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் திங்கள்கிழமை(ஏப். 28) நடைபெற்றது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(ஏப். 29) காலை வாக்குப்பதிவு அனைத்து பகுதிகளிலும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீா்வு: நவாஸ் ஷெரீஃப்

லாகூா்: இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் விரும்புவதாக தகவலறிந்த வட... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் விரைவான, நியாயமான விசாரணைக்கு சீனா ஆதரவு

பெய்ஜிங்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரைவான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அதன் இற... மேலும் பார்க்க