செய்திகள் :

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தேசம்: சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தோலுரித்த இந்தியா!

post image

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தேசம் என்று கடுமையான சொற்களால் ஐ.நா. அவையில் இந்தியா விமர்சித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் ’வோட்டான்’ என்படும் பயங்கரவாதத் தொடர்பு குழுக்களால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டு பேசிய தூதர் யோஜ்னா படேல், உலகளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்குமொரு தேசமாக பாகிஸ்தான் திகழ்கிறதென விமர்சித்தார்.

அவர் பேசியதாவது: “இந்தியா மீது ஒரேயொரு உறுப்பினர் (பாகிஸ்தான்) மட்டும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. அண்மையில் பேட்டியொன்றில் பேசிய பாகிஸ்தானின் அமைச்சர், தங்கள் தேசம் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்து வந்திருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இதனை உலக நாடுகள் பார்க்கத் தவறவில்லை. இதன்மூலம், இப்பகுதியில் அவர்கள் அமைதியை சீர்குலைப்பது தெளிவாகிறது. இனிமேலும், உலகம் கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்றார்.

“கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்டிருந்த கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப்பின், பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்திருப்பதென்பது பஹல்காமில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலால்தான். எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, இதனால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள், அந்த சமூகம் மற்றும் தனிநபர்களின் மீது நெடுங்காலம் இருக்கும் அதன் தாக்கத்தை புரிந்துகொண்டு செயல்படுகிறது”.

”பஹல்காம் தாக்குதலை கண்டித்து கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, ஊடுருவல்காரர்கள், பயங்கரவாதச் செயல்களை அனுமதிப்பவர்கள், அரங்கேற்றுபவர்கள், அதற்கான நிதியுதவி செய்வோர் யாராக இருப்பினும், அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்வதுடன் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தும் எந்தவொரு விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவே முடியாதென்பதில் இந்தியா தமது நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது” என்றார்.

கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் சடலமாக மீட்பு! உடலைத் தாயகம் கொண்டு வர வலியுறுத்தல்!

கனடா நாட்டில் பலியான இந்திய மாணவியின் உடலைத் தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி நிர்வாகி தவிந்தர் சையினி... மேலும் பார்க்க

சீன உணவகத்தில் தீ: 22 பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். லியோனிங் மாகாணத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இன்று (ஏப்.29) மதியம் 12.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிரு... மேலும் பார்க்க

கனடா தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி! கட்சி அந்தஸ்தும் பறிபோனது!

கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்துள்ளார்.மேலும், அவரது புதிய ஜனநாயகக் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்த நிலையில், கட்சிக்கான அந்தஸ்து பறிபோ... மேலும் பார்க்க

இந்தியா போர் தொடுத்தால்.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் பாகிஸ்தானியர்கள்! கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லை!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்குமோ என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.ஆனால், அதற்கெல்... மேலும் பார்க்க

ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

நடிகர் ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு, திரைத்துறையில் அவர் படைத்த சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட உள்ளார். நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், பாடகர், முக்கியமாக சண்டைக் க... மேலும் பார்க்க

கனடா பிரதமராகும் மார்க் கார்னே! அமெரிக்காவுடனான உறவுக்கு முடிவு என அறிவிப்பு!

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னே பதவியேற்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார... மேலும் பார்க்க