செய்திகள் :

சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வழங்கிய ராகுல்!

post image

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வழங்கினார்.

இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலிக்கு வருகை தந்துள்ள காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று காலை லக்னௌ விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவரை மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராம், அமேதி எம்பி கிஷோரி லால் சர்மா மற்றும் பிற தலைவர்கள் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் சாலை வழியாக ரேபரேலிக்குச் சென்றார்.

ரேபரேலியில், விசாகா இண்டஸ்ட்ரீஸில் 2 மெகாவாட் சூரிய சக்தி ஆலையையும், மின்சார சார்ஜிங் நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். மேலும் அந்த நிகழ்வில் அரசு சாரா நிறுவனம் ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்கிய 12-க்கும் மேற்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களையும் அவர் வழங்கினார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் முதல்முறையாக உத்தரப் பிரதேசத்தின், அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி ஏப்ரல் 30(நாளை) செல்லவுள்ளார். அமேதி தொகுதியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் இதயப் பிரிவைத் திறந்து வைக்கவுள்ளார். மேலும், அதே நாளில் இந்திரா காந்தி நர்சிங் கல்லூரியையும் அவர் ஆய்வு செய்யவுள்ளார்.

சஞ்சய் காந்தி மருத்துவமனையானது, புதுதில்லியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு அறக்கட்டளையால் இயக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், அறங்காவலராக ராகுல் காந்தியும் செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்... மேலும் பார்க்க

உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூட... மேலும் பார்க்க