பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஏப். 23 அன்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியா வரத் தடை, தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல், சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்ட சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் நாளை (ஏப். 30, புதன்கிழமை) பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நடைபெற உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதையும் படிக்க |3-வது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை: பேரவையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை