செய்திகள் :

உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

post image

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூடிய 48 சுற்றுலாத் தலங்களை அம்மாநில அரசு மூடியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.

இதனைத் தொடந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லையிலும் இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகின்றன.

மேலும், பயங்கரவாதிகளின் நண்பர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரின் வீடுகளை இந்திய ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் பயங்கரவாதிகள் (ஸ்லீப்பர் செல்கள்) சதித்திட்டங்களில் இறங்கியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஸ்ரீநகர் மற்றும் காந்தர்பால் மாவட்டங்களில் காஷ்மீர் பண்டித்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே உள்கட்டமைப்பை தகர்க்கவும், வெளியூர் ரயில்வே ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் முகாமைவிட்டு வெளியேற வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல், பயங்கரவாதிகளால் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க : இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான்; 2026-ல் 2.0: முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்... மேலும் பார்க்க

சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வழங்கிய ராகுல்!

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வழங்கினார். இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலிக்கு வருகை தந்துள்ள காங்கிரஸ் ... மேலும் பார்க்க