செய்திகள் :

பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனாவுக்கு வழங்கிய லடாக் பரிசை மோடி ரத்து செய்ய வேண்டும்: சுவாமி

post image

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள சீனாவுக்கு வழங்கப்பட்ட லடாக் பரிசை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டிலிருந்து பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டு, அவர்களது விசாக்களையும் ரத்து செய்தது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளனர்.

இதனிடையே, பாகிஸ்தான் அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைக் காப்பதற்கு முழு ஆதரவளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”26 பேரைக் கொடூரமாக கொலை செய்த பாகிஸ்தானுக்கு துணை நிற்பதாக சீனா வெளிப்படையாக அறிவித்துள்ளது. அதனால், மக்களவையில் எவ்வித ஒப்புதலும் பெறாமல், திருத்தப்பட்ட எல்லை ஒப்பந்தம் என்ற பெயரில் கடந்தாண்டு சீனாவுக்கு அளித்த லடாக் பிரதேசத்தின் பரிசை மோடி ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - சீனா ஒப்பந்தம்

கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய சீன வீரா்களுக்கும் இந்திய படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு இருநாடுகளுக்கும் இடையே கிழக்கு லடாக் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன.

இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு, கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது மற்றும் அங்கிருந்து இருநாட்டு வீரா்களை திரும்பப் பெறுவது குறித்து இந்தியா-சீனா இடையே கடந்தாண்டு இறுதியில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க : நெருக்கடியான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்: மோடிக்கு ராகுல் கடிதம்!

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்... மேலும் பார்க்க

உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூட... மேலும் பார்க்க