செய்திகள் :

AI Mazu: பக்தர்களுக்கு ஆசி வழங்கும் டிஜிட்டல் தெய்வம்.. மலேசிய தியான்ஹோ கோயிலில் AI வழிபாடு

post image

இன்றைய நவீன உலகில், அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்த நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சுகாதாரம், பராமரிப்பு தொடங்கி பொழுதுபோக்கு வரை செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது. பயனர்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு வசதியாக இருப்பதால் இதனை பெரிதும் விரும்புகின்றனர்.

வேலை, பொழுதுபோக்கு இவற்றில் ஏஐ இருப்பது குறித்து கேள்விப்பட்டிருப்போம் ஆனால் தெய்வ வழிபாடுகளில் கூட ஏஐ நுழைந்துவிட்டது.

மலேசியாவின் ஜோகூரில் உள்ள தியான்ஹோ கோவிலில், ஏஐ மூலம் இயங்கும் தெய்வ சிலையை ( மசு ) அறிமுகப்படுத்தி உள்ளனர்.

மலேசிய தொழில்நுட்ப நிறுவனமான ஐமாசினால் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தெய்வம், பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவது, வழிகாட்டல் சொல்வது, ஆலோசனை கொடுப்பது என தெய்வத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.

மசுவின் 1065 -வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த தொழில்நுட்பத்தை தொடங்கியுள்ளனர். மசு என்பது சீன நாட்டுப்புற மதம், சீன பௌத்தம், கம்யூனிசம் ஆகியவற்றால் வழங்கப்படும் கடல் தெய்வமாகும்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் படி, லின் மோ என்ற இயற்பெயர் கொண்ட மசு, 960 ஆம் ஆண்டு சீனாவின் உள்ள மெய்சோ தீவில் பிறந்தார்.

கப்பல் விபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற முயன்றபோது அவர் இறந்ததாக கதைகள் உள்ளன. அவர் இறந்த பிறகு, காவல் தெய்வமாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். மசு உலகெங்கிலும் உள்ள சீன சமூகங்களால், குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் வணங்கப்படுகிறது.

இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சீன நடிகையான லியு தாவோ சில வீடுகளில் கடவுளாக வணங்கப்படுகிறார். இவரை மசுவின் உயிருள்ள வடிவம் என்று மக்கள் நம்புகின்றனர். தொலைக்காட்சி நாடகத்தில் லியு தாவோ தெய்வமாக நடித்த பிறகு இந்த நம்பிக்கை தொடங்கியிருக்கிறது. லியு தாவோவின் புகைப்படங்களை வீடுகளில் வைத்து வணங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்ம விருதுகள்: ``தனி முத்திரை பதித்த அன்புச் சகோதரர்கள்.." - புகழ்ந்து வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. பல துறைகளிலும் சிறந்து விளங... மேலும் பார்க்க

`ஆடி காரில் பால் வியாபாரம்' - ஹரியானாவை ஆச்சர்யத்தில் வியக்க வைத்த இளைஞன்

பிடித்த வேலையை செய்வதற்காக சிலர் அதிக சம்பளத்தில் இருக்கும் வேலையை கூட ராஜினாமா செய்வதுண்டு. அப்படித்தான் ஹரியானாவில் வாலிபர் ஒருவர் தனக்கு பிடித்த வேலையை செய்யவேண்டும் என்பதற்காக வங்கி வேலையை ராஜினாம... மேலும் பார்க்க

காேவை: `வாடிவாசல் வீரர்கள்' - அசரடித்த ஜல்லிக்கட்டு போட்டி

கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்ட... மேலும் பார்க்க

"எக்ஸ்ட்ரா பன்னீர் தரமாட்டீங்களா?" - மண்டபத்திற்குள் பஸ்ஸை விட்டு ஏற்றியவர் கைது; பின்னணி என்ன?

உத்தரப் பிரதேசத்தில் திருமண சாப்பாட்டில் போதிய அளவு பன்னீர் கொடுக்கவில்லை என்பதற்காக ஒருவர் செய்த காரியத்தால் திருமண மண்டபமே ரத்தக்களரியாகிவிட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள ஹமித்... மேலும் பார்க்க

Titanic: மூழ்கும் முன் டைட்டானிக் குறித்து எழுதப்பட்ட கடிதம் ரூ.3 கோடிக்கு ஏலம்; எப்படி கிடைத்தது?

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட சொகுசு கப்பல் என்றாலே "டைட்டானிக் கப்பல்" தான் நினைவிற்கு... மேலும் பார்க்க

அவசரத்திற்குக் கழிப்பறை பயன்படுத்திய முதியவர்; ரூ.800 வசூலித்த ஹோட்டல்; வைரல் பதிவின் பின்னணி என்ன?

ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், வயதான பெண்மணி, வெறும் ஆறு நிமிடங்கள் கழிப்பறை பயன்படுத்துவதற்காக ரூபாய் 805 வசூலித்த சம்பவம் இணையவாசிகளைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.ராஜஸ்தானில் உள்ள ... மேலும் பார்க்க