செய்திகள் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கு மே13-ம் தேதி தீர்ப்பு... நீதிபதி மாற்றமும், விளக்கமும்!

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் அம்பலமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க” எனக் கண்ணீர் மல்க கெஞ்சியது தொடங்கி, “டேய் உன்னை நம்பித்தானே வந்தேன் இப்படி ஏமாத்திட்டியே” என்று இளம் பெண்கள் கதறி அழுததை யாரும் மறந்துவிட முடியாது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிறைவு பெற்றது. அரசு சார்பில் 50க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் கைது செய்யப்பட்ட 9 பேர்களுக்கு எதிராக சாட்சி அளித்துள்ளனர்.

திருநாவுக்கரசு
வசந்த், சபரிராஜன், சதீஷ்
மணிவண்ணன்
அருளானந்தம்
அருண்குமார்
பாபு
ஹெரோன் பால்

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வருகிற மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நேற்று மாலை அறிவிப்பு வெளியானது. அந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியானது.

நீதிபதி மாற்றமும், விளக்கமும்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த, கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, கரூர் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்னவாகும் என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தபோது, “தமிழ்நாடு முழுவதும் 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது வழக்கமான ஒன்றுதான். நீதிபதி நந்தனி தேவி பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை வழங்கிய பிறகு தான், கரூர் நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் ஆவார்.” என்று கூறினர்.

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு : குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

கடலூர் மாவட்டம் குப்பநத்தம் புது காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த சாமி கண்ணு எனும் நபருடைய மகனான முருகேசன் இளங்கலைப் படிப்பு படித்து வந்துள்ளார்.உச்ச நீதிமன்றம் அதே பகுதியில் உள்ள இடை... மேலும் பார்க்க

Bombay High Court: `நாய் மாஃபியா' - நீதி மன்றத்தை அவமதித்த பெண்; 20,000 அபராதம் விதித்து நடவடிக்கை

கடந்த ஜனவரி மாதம், மும்பையில் தெருநாய்களுக்கு உணவளிப்பதனால், தான் வசிக்கும் குடியிருப்பின் நிர்வாகக் குழு தனக்கு துன்பம் ஏற்படுத்துவதாக லீலா வர்மா என்ற பெண்மணி உயர் நீதிமன்றத்தில் குடியிருப்பு சங்கத்த... மேலும் பார்க்க

சாவர்க்கர் குறித்த கருத்து : `இது எதாவது ராகுல் காந்திக்கு தெரியுமா?’ - காட்டமான உச்ச நீதிமன்றம்

கடந்த 2022 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடத்தப்பட்ட ஒற்றுமையை யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி, `சாவர்க்கர் பிரிட்டிஷார் உடன் இணைந்து செயல்பட்டார்’ என்றும் `பிரிட்டிஷார் ... மேலும் பார்க்க

`6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’ - வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் கடந்த 1996- 2001 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடங்கப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து ... மேலும் பார்க்க

Tasmac Case : `முகாந்திரம் உள்ளது' - ED சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதன... மேலும் பார்க்க

`ஏற்கெனவே அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறோம் என்கிறார்கள்; இதில் இது வேறா?’ - உச்ச நீதிமன்ற நீதிபதி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பி வைத்த பத்துக்கும் அதிகமான மசோதாக்களை நிலுவையில் போட்டு வைத்ததும், அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த... மேலும் பார்க்க