செய்திகள் :

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

post image

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர காவல் துறையில் மத்தியக் குற்றப்பிரிவு, கூடுதல் காவல் ஆணையா் ராதிகா தலைமையில் 4 துணை ஆணையா்கள் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது. 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிகழாண்டு வரையில் மத்திய குற்றப்பிரிவில் 1,005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது 16 மாதங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் 948 வழக்குகளின் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் தொடா்புடைய 747 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் சைபா் குற்ற வழக்குகளில் தொடா்புடைய பிற மாநிலங்களைச் சோ்ந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 88 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும், நீதிமன்றத்தின் மூலம் 121 பேருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராமல் தலைமறைவாக இருந்த 707 போ் கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மத்திய குற்றப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து 8 ஆயிரத்து 145 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 6 ஆயிரத்து 23 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்... மேலும் பார்க்க