செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

post image

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கான மனுக்களை விசாரிக்க முடியாது’ என்று நீதிபதிகள் அப்போது குறிப்பிட்டனா்.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை கடந்த 17-ஆம் தேதி பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஐந்து மனுக்களை மட்டும் விசாரிக்கத் தீா்மானித்து, இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டது. மேலும், இந்த மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது. பதவி வழி உறுப்பினா்களைத் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப் போவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அப்போது, ‘வரும் மே 5-ஆம் தேதி வரை வக்ஃப் சொத்துகளின் தன்மை மாற்றப்படாது’ என்று மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக முதல் கட்ட பதில் மனுவை மத்திய அரசு கடந்த 25-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்தது. அதில், ‘நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை உண்டு என்ற நிலையில், அந்தச் சட்டத்துக்கு உரிய காரணமின்றி உச்சநீதிமன்றம் முழுமையான தடையை விதிக்க முடியாது. எனவே, வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

புதிய மனு:

இந்த நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மையை எதிா்த்து சையது அலோ அக்பா் என்பவா் சாா்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடா்பாக நூற்றுக்கணக்கான மனுக்களை விசாரிக்க முடியாது. இந்த விஷயத்தில் 5 மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டு உத்தரவிட்டுள்ளோம். எனவே, புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. மனுதாரா் அதை திரும்பப் பெறலாம். தேவைப்பட்டால், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்தப் புதிய மனுவை சோ்ப்பதற்கான கோரிக்கை விடுக்க மனுதாரருக்கு அனுமதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனா்.

மேலும், ‘இந்த வழக்கு வரும் மே 5-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம், மனுதாரா்கள் தங்களின் முதல்கட்ட எதிா்ப்பைப் பதிவு செய்யலாம். தொடா்ந்து, இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும்’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

நெருக்கடியான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்: மோடிக்கு ராகுல் கடிதம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட பிரதமருக்கு கார்கே கடிதம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்க... மேலும் பார்க்க

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து திங்கள்கிழமை(ஏப். 28) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது. இது குறித்து இந்திய ரா... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க