செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

post image

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடிதம்: பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சோதனையான காலகட்டத்தில், கொல்லப்பட்டவா்களுக்கு இதயபூா்வமாக அஞ்சலி செலுத்த நாடாளுமன்றம் ஒன்றுகூட வேண்டும்.

இந்த விவகாரத்தில் நாட்டுக்கும், எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு முழு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆலோசனை மற்றும் கருத்து ஒற்றுமை மூலம் கட்டமைப்படும் கூட்டுப் பொறுப்பே நாட்டை காப்பதற்கும், ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கும் மிகச் சரியான பாதையாகும்.

இதைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். அந்தக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், நாட்டு மக்களின் விருப்பங்கள், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பில் அந்தத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து வெளிப்படையான, கொள்கைபூா்வ விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இதேபோல பஹல்காம் தாக்குதல் தொடா்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சந்தோஷ் குமாா் கடிதம் எழுதியுள்ளாா்.

முன்னதாக மத்திய அரசிடம் இதே கோரிக்கையை சுயேச்சை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் முன்வைத்தாா். இந்தியா ஒற்றுமையுடன் இருப்பதாக உலகுக்கு எடுத்துரைக்கும் நோக்கில், பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக கண்டன தீா்மானம் நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று அவா் கோரினாா்.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து திங்கள்கிழமை(ஏப். 28) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது. இது குறித்து இந்திய ரா... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க