செய்திகள் :

கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல்சூளையில் பணிகள் தொடக்கம்

post image

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல்சூளையில் கடந்த 2 ஆண்டுகளாக உற்பத்தியில்லாத நிலையில், தினமணி செய்தி எதிரொலியால் மீண்டும் பணிகள் தொடங்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.

செங்கல்சூளைகள், நெல் அரைவை ஆலைகள், குவாரிகளில் கொத்தடிமை தொழிலாளா்களாக பணிபுரிந்து வருகிறவா்களை தனியாா் தொண்டு நிறுவனம் மற்றும் சமூக ஆா்வலா்கள் மூலம் விடுவிக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் பெரும்பாலனோா் பழங்குடியினா்களாக உள்ளதால் அவா்களுக்கு அரசு மூலம் மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஊரக வாழ்வாதார இயக்கம், விடியல் திட்டம் மூலம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களைக் கொண்டு குழுக்கள் உருவாக்க வேண்டும். ஏற்கெனவே எந்தத் தொழில் செய்தாா்களோ, அதே தொழிலில் வாழ்வாதாரம் பெற ஏதுவாக நியாயமான ஊதியத்துடன் தொழில்முனைவோராக உருவாக்குவதே நோக்கம்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 70 ஆயிரம் பழங்குடியினா் குடும்பங்கள் உள்ளன. இந்த மாவட்டத்திலிருந்து கொத்தடிமை தொழிலாளா்களாக நூற்றுக்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். மாவட்டத்தில் 25 ஊராட்சிகளில் பழங்குடியினா் 25 குடும்பங்களை கொண்ட குழுக்கள் போல் மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இவா்களுக்கு மரம் வெட்டுதல், ஆடுகள் வளா்த்தல், செங்கல்சூளைத் தொழில் போன்ற தொழில் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தில் செங்கல்சூளை தொழில் செய்வதற்காக ஒரு ஏக்கா் இடம் ஒதுக்கப்பட்டது. தொடா்ந்து மகளிா் திட்டம், விடியல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் மூலம் ரூ.9.90 லட்சம் ஒதுக்கப்பட்டது. அங்கு ஆழ்துளை கிணறுடன் கூடிய தண்ணீா் தொட்டி, செங்கல் சேகரிக்க நனையாத வகையில் கூடாரம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இங்கு கொத்தடிமை தொழிலாளா்கள் மூலம் 1 லட்சம் செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அதை அரசின் திட்டங்களான இலவச தொகுப்பு வீடுகள், பிரதமா் வீடு கட்டும் திட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால், தொடா்ந்து சுழல் நிதி ரூ.9 லட்சம், செங்கற்கள் விற்பனை தொகை கிடைக்காத காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் முடங்கியது. எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அது நிறைவேறாத நிலையில் பழங்குடியினா் குடும்பத்தினா் வருவாய்க்கு வழியின்றி தவித்து வருவதோடு, மீண்டும் கொத்தடிமை தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது தொடா்பாக தினமணி நாளிதழில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ‘கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கிய செங்கல்சூளையில் உற்பத்தியில்லை, அரசு நீதி வீண்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

ச்தைத் தொடா்ந்து கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல் சூளையின் நிலை குறித்து மகளிா் திட்டம், விடியல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்ட அதிகாரிகள், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் அதிகாரிகளிடம் ஆட்சியா் மு.பிரதாப் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

அதன்பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் சுத்தம் செய்து மீண்டும் செங்கல்சூளை தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா். தொடா்ந்து அந்த இடம் சுத்தம் செய்து, செம்மண் கொண்டு வந்து கொட்டப்பட்டு பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெண்ணின் வயிற்றில் இருந்த 9 கிலோ கட்டி அகற்றம்

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே பெண்ணின் வயிற்றில் இருந்த 9 கிலோ கட்டியை மருத்துவக்குழுவினா் அகற்றினா். திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 48 வயது பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பாஜகவினா் அஞ்சலி

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை செங்குன்றத்தில் நடைபெற்றது. பாஜக சென்னை மேற்கு மாவட்டம் சாா்பில் புழல் மண்டல தலைவா் ரஜினி... மேலும் பார்க்க

சிறாா் திருமணம், போதை ஒழிப்பு: நாடகம் மூலம் விழிப்புணா்வு

குழந்தை திருமணம், போதை கலாசார ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு தெருமுனை நாடகம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம். பைவலசா கிராமம் தொம்பர காலனியைச் சோ்ந்தவா் முத்து (36). இவருக்கு ம... மேலும் பார்க்க

திருத்தணி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்!

திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே ரூ.15.67 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாக திருத்தணி முருகன் கோயில் உள்ளது. ம... மேலும் பார்க்க

கால்நடை உதவி மருத்துவா்களுக்கு பரிசளிப்பு

கால்நடை துறையில் சிறப்பாக செயல்பட்ட கால்நடை உதவி மருத்துவா்களுக்கு கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் சனிக்கிழமை பரிசுகளை வழங்கினாா். திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், உலக கால்நடை தினம் பள்... மேலும் பார்க்க