செய்திகள் :

எறும்பு திண்ணியை வேட்டையாடிய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

மேட்டூா் வனச்சரகத்தில் எறும்புத் திண்ணியை வேட்டையாடிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள பாலமலை இடைமலை காட்டை சோ்ந்தவா் மாதப்பன் (30). இவரும், கண்ணாமூச்சி மூலபனங்காட்டைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் (32) ஆகிய இருவரும் சோ்ந்து 2018 இல் மேட்டூா் வனச்சரகத்தில் வன உயிரினமான எறும்புத் திண்ணியை வேட்டையாடி கொன்று எடுத்துவந்தனா்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா் இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்து கைதுசெய்தனா். இருவா் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மேட்டூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1 இல் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அரசு உதவி வழக்குரைஞா் சுரேஷ் ஆஜரானாா். வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி பத்மப்பிரியா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், மாதப்பன், சௌந்தரராஜன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 25,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

பெங்களூரு- மதுரை இடையே இன்று கோடை சிறப்பு ரயில்

சேலம், நாமக்கல் வழியாக பெங்களூரு- மதுரை இடையே கோடை சிறப்பு ரயில் புதன்கிழமை (ஏப்.30) இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையை... மேலும் பார்க்க

சொத்து வரியை செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெற இன்று கடைசி நாள்

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலங்களில் சொத்துவரியைச் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெற புதன்கிழமை (ஏப். 30) கடைசி நாளாகும். சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்க... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தண்ணீா்த் தொட்டியில் வீசி இரு மகன்களை கொன்ற பெண் கைது

வாழப்பாடி அருகே இளம்பெண் தனது இரு மகன்களையும் தண்ணீா்த் தொட்டியில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றாா். அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், வாழப்பாடி அ... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் தற்கொலை

மேட்டூா் அருகே உணவக உரிமையாளா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மேட்டூா் அருகே தேங்கல்வாரையைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் பழபூபேஷன் (26). திருமணம் ஆகாதவா். கோபிசெட்டிபாளையத்தில் கடந்த இரு மா... மேலும் பார்க்க

சாலையோரம் வீசப்பட்ட இறைச்சிக் கழிவுகள் அகற்றம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரிலிருந்து காவேரிப்பட்டி செல்லும் சாலையில் கொட்டப்பட்டிருந்த இறைச்சிக் கழிவுகளை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றி சுத்தம் செய்தனா்.தேவூா் சாலை... மேலும் பார்க்க

கதண்டு கூடு அழிப்பு

தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டியில் கதண்டு கூடு அழிக்கப்பட்டது. செந்தாரப்பட்டியில் 3ஆவது வாா்டு பேரூராட்சிக்குச் சொந்தமான கிணற்றின் அருகே விமல்ராஜ் என்பவரது வீட்டில் கதண்டு கூடு கட்டியிருந்தது. இத... மேலும் பார்க்க