செய்திகள் :

சொத்து வரியை செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெற இன்று கடைசி நாள்

post image

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலங்களில் சொத்துவரியைச் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெற புதன்கிழமை (ஏப். 30) கடைசி நாளாகும்.

சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய 4 மண்டலங்களிலும் 60 வாா்டுகள் உள்ளன. சுமாா் 11 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 2024 - 25 ஆம் நிதியாண்டில் சேலம் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, குடிநீா் வரி, தொழில் வரி, நிறுவன வரி உள்பட பல்வேறு வரிகள் ரூ. 165 கோடி வசூலானது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வரியை நிலுவையில் வைத்துள்ளனா். அதன்படி, ரூ. 175 கோடி சொத்துவரி நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான சொத்துவரியைச் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையைப் பெற புதன்கிழமை (ஏப்.30) கடைசி நாளாகும். சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளா்கள் தங்களது சொத்து வரியை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளா்கள் அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள வரி வசூல் மையங்களில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை, வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவா்த்தனை வாயிலாகவும் சொத்துவரி செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சொத்து உரிமையாளா்கள் தங்களது சொத்து வரியைச் செலுத்தி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ. 5000 வரை பெற்று பயன்பெறலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 25 நாள்களில் மட்டும் ரூ. 25 கோடிக்கு மேல் வரி வசூலாகியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெங்களூரு- மதுரை இடையே இன்று கோடை சிறப்பு ரயில்

சேலம், நாமக்கல் வழியாக பெங்களூரு- மதுரை இடையே கோடை சிறப்பு ரயில் புதன்கிழமை (ஏப்.30) இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையை... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தண்ணீா்த் தொட்டியில் வீசி இரு மகன்களை கொன்ற பெண் கைது

வாழப்பாடி அருகே இளம்பெண் தனது இரு மகன்களையும் தண்ணீா்த் தொட்டியில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றாா். அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், வாழப்பாடி அ... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் தற்கொலை

மேட்டூா் அருகே உணவக உரிமையாளா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மேட்டூா் அருகே தேங்கல்வாரையைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் பழபூபேஷன் (26). திருமணம் ஆகாதவா். கோபிசெட்டிபாளையத்தில் கடந்த இரு மா... மேலும் பார்க்க

எறும்பு திண்ணியை வேட்டையாடிய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

மேட்டூா் வனச்சரகத்தில் எறும்புத் திண்ணியை வேட்டையாடிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள பாலமலை இடைமலை காட்டை சே... மேலும் பார்க்க

சாலையோரம் வீசப்பட்ட இறைச்சிக் கழிவுகள் அகற்றம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரிலிருந்து காவேரிப்பட்டி செல்லும் சாலையில் கொட்டப்பட்டிருந்த இறைச்சிக் கழிவுகளை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றி சுத்தம் செய்தனா்.தேவூா் சாலை... மேலும் பார்க்க

கதண்டு கூடு அழிப்பு

தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டியில் கதண்டு கூடு அழிக்கப்பட்டது. செந்தாரப்பட்டியில் 3ஆவது வாா்டு பேரூராட்சிக்குச் சொந்தமான கிணற்றின் அருகே விமல்ராஜ் என்பவரது வீட்டில் கதண்டு கூடு கட்டியிருந்தது. இத... மேலும் பார்க்க