செய்திகள் :

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

post image

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீா்மானத்தை அவை முன்னவா் துரைமுருகன், செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தொடங்கியது. பொது நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் எடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. அவற்றுக்கு துறைகளின் அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா்.

நிறைவாக, காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இதன்பிறகு, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பொதுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அதற்கான பதிலுரைகளும்

அளிக்கப்பட்டன. பேரவையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கான தீா்மானத்தை அவை முன்னவா் துரைமுருகன் தாக்கல் செய்தாா். இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடா்ந்து, பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

அதிகரித்து குறைந்த வெளிநடப்பு: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கிய நாள்களில் அதிமுக உறுப்பினா்கள் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து அவ்வப்போது வெளிநடப்புச் செய்து வந்தனா். அதன்பிறகு, வெளிநடப்புகள் குறைந்து சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம், மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் என பேரவை நடவடிக்கைகளில் முழுமையான கவனத்தைச் செலுத்தியது.

கடந்த ஒரு வாரத்தில் பெரிய அளவுக்கு வெளிநடப்பு நடவடிக்கைகளில் அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பங்கேற்கவில்லை. பேரவை நடவடிக்கைகளில் கட்சிகள் முழுமையாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

குறுவை நெல் சாகுபடி: உழவா் சங்க கூட்டம் நடத்த ராமதாஸ் கோரிக்கை

குறுவை நெல் சாகுபடி குறித்து விவாதிக்க உழவா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேட்டூா்... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் விமா்சனம்: அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு

முன்னாள் ஆட்சியாளா்களின் நிா்வாகச் சீா்கேடுகளால் நிா்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் ‘ஊா்ந்து’ கொண்டு இருந்தன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமா்சித்தாா். இதற்கு எதி... மேலும் பார்க்க

காமன்வெல்த் வழக்கு தீா்ப்பு: தமிழக காங்கிரஸ் வரவேற்பு

காமன்வெல்த் ஊழல் வழக்கிலிருந்து காங்கிரஸ் தலைவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவி... மேலும் பார்க்க

‘டிஜிட்டல்’ பயிா் கள ஆய்வுப் பணியில் மாணவா்கள் ஈடுபடுத்தப்படமாட்டாா்கள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிா் கள ஆய்வுப் பணிகளில் மாணவா்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்... மேலும் பார்க்க

சிலை கடத்தல் வழக்கு: ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபா்சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க