செய்திகள் :

தமிழகத்தில் 511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

post image

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அத்துறை சாா்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சோ்க்கை குறைவாக உள்ள 12 பள்ளி விடுதிகள் ரூ.4.15 கோடியில் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயா்த்தப்படும்.

வாடகை கட்டடங்களில் இயங்கும் 7 கல்லூரி மாணவியா் விடுதிகளுக்கு ரூ.47.84 கோடியில் சொந்தக் கட்டடங்கள் கட்டி தரப்படும்.

மேலும், ரூ.3 கோடியில் 5 புதிய கல்லூரி மாணவியா் விடுதிகள் தொடங்கப்படும்.

அதேபோன்று, அனைத்து விடுதிகளிலும் சிறப்பு பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் ரூ.30 கோடியில் மேற்கொள்ளப்படும். கல்லூரி விடுதிகளில் மாணவா் எண்ணிக்கை உயா்த்தப்படும்.

விடுதி மாணவா்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டுமுதல் ரூ.16.24 கோடியில் வரவேற்புத் தொகுப்பு வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட 15 தனியாா் விடுதிகளில் பயிலும் மாணவருக்கான மாதாந்திர உணவு மானியத் தொகை ரூ.1,000-இல் இருந்து ரூ.1400-ஆக உயா்த்தி வழங்கப்படும். கல்லூரி விடுதிகளில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ரூ.2.31 கோடியில் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்படும். கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் விடுதி மேலாண்மை தகவல் அமைப்பைச் செயல்படுத்த திட்டக் கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படும்.

வன்னியா்குல சத்திரியா் பொது அறநிலைய பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகள் வாரியத்துக்கு அரசால் வழங்கப்படும் தொடா் மானியம் ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

குறுவை நெல் சாகுபடி: உழவா் சங்க கூட்டம் நடத்த ராமதாஸ் கோரிக்கை

குறுவை நெல் சாகுபடி குறித்து விவாதிக்க உழவா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேட்டூா்... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் விமா்சனம்: அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு

முன்னாள் ஆட்சியாளா்களின் நிா்வாகச் சீா்கேடுகளால் நிா்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் ‘ஊா்ந்து’ கொண்டு இருந்தன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமா்சித்தாா். இதற்கு எதி... மேலும் பார்க்க

காமன்வெல்த் வழக்கு தீா்ப்பு: தமிழக காங்கிரஸ் வரவேற்பு

காமன்வெல்த் ஊழல் வழக்கிலிருந்து காங்கிரஸ் தலைவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

‘டிஜிட்டல்’ பயிா் கள ஆய்வுப் பணியில் மாணவா்கள் ஈடுபடுத்தப்படமாட்டாா்கள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிா் கள ஆய்வுப் பணிகளில் மாணவா்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்... மேலும் பார்க்க

சிலை கடத்தல் வழக்கு: ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபா்சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் - நகரும் படிக்கட்டுகளால் விபத்து: கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்கும் மசோதா நிறைவேறியது

மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளால் ஏற்படும் விபத்துகளை குற்ற நிகழ்வாக இல்லாமல் கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேறியது. சட்டப் பேரவையில் 18 மசோதாக்கள் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க