செய்திகள் :

ஆடி அமாவாசை: காமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

post image

திருக்குவளை: ஆடி அமாவாசையையொட்டி, காசிக்கு நிகராக புண்ணியம் தரும் காமேஸ்வரத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசையொட்டி, காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆயிரக்கணக்கானோர் வியாழக்கிழமை கடலில் புனித நீராடினர்.

மாதந்தோரும் வரும் ஒவ்வொரு அமாவாசை நாளும் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. இதில் தை மற்றும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாள் மிகவும் சிறப்பு பெற்றதாகும். ஆடி அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்பணம் செய்தால் அனைத்து ஆசிகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

அதன்படி, நாகை மாவட்டம் பிரசித்தி பெற்ற காமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறி மற்றும் உணவுகளை படைத்தும், எள், நவதானியம், பிண்டம் வைத்து பின்னர் திதி கொடுத்து வங்கக்கடலில் புனித நீராடினர்.

இதற்காக காமேஸ்வரம் கடற்கரையில் அதிகாலை முதல் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாஸ்திர மற்றும் அகத்தியர், தமிழ் முறைப்படி, தேவார, திருவாசகம் ஓதி, முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை நாளில் காமேஸ்வரம் கடலில் புனித நீராட அதிக அளவு பக்தர்கள் வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, அங்கு மாவட்ட காவல் துறை, தீயணைப்புத்துறை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் காமேஸ்வரம் மீனவ கிராமம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன.

ஆடி அமாவாசை: சங்கமத்துறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

On the occasion of Aadi Amavasai, many people offered offerings to their ancestors at Kameswaram

நீர்பிடிப்புப் பகுதியில் மழை: திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.நிகழாண்டு ... மேலும் பார்க்க

கார்கில் வெற்றி நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரவணக்கம்

கார்கில் வெற்றி நாளையொட்டி, நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு இராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 1999-ஆம் ஆ... மேலும் பார்க்க

3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 35, 400 கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,400 கன அடியிலிருந்து... மேலும் பார்க்க

வீரர்களின் தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்: மோடி

புது தில்லி: கார்கில் போரில் நமது வீரர்கள் செய்த தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும், விஜய் திவாஸ், இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் ஒப்பற்ற துணிச்சலையும், வீரத்... மேலும் பார்க்க

கார்கில் விஜய் திவாஸ்: வீரர்களுக்கு முர்மு அஞ்சலி!

புது தில்லி: கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கார்கில் போரில் தைரியத்துடனும் வீரத்துடனும் போராடிய வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்... மேலும் பார்க்க