செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!

post image

பஹல்காம் தாக்குதலையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது எந்தத் தாக்குதலுல் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் தரப்பில் தெரிவித்ததாவது, இந்திய வான்பரப்பில் இருந்து தாக்குதல் பாகிஸ்தான் மீது தாக்குதல். கோழைத்தனமான இந்தியாவின் நடவடிக்கை தக்க பதிலடியை, சரியான இடத்தில் உரிய நேரத்தில் அளிக்கப்படும். இந்தியாவின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது; துக்கம் சூழவுள்ளது என்று கூறினர்.

இதனிடையே, இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலையும் பிறப்பித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் விரைவில் தணியும் என்றார்.

தொடர்ந்து, ``இரு நாடுகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும், ராணுவ நடவடிக்கைகளில் இருந்தும் இரு நாடுகளும் பின்வாங்க வேண்டும்’’ என்று ஐ.நா. பொதுச்செயலர் குட்டரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து புதன்கிழமை காலை 10 மணியளவில் விவரம் அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த திடீர் நடவடிக்கை குறித்து அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளிடமும் இந்தியா விளக்கமளிக்கிறது.

பாகிஸ்தான்: இந்திய யூடியூப் சேனல்கள் முடக்கம்

பாகிஸ்தானில் இந்திய யூடியூப் சேனல்களை அந்நாட்டு அரசு தடை செய்தது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான்... மேலும் பார்க்க

இந்தியாவின் பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவின் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,... மேலும் பார்க்க

முதல்முறையாக ஐரோப்பிய பயணம் மேற்கொள்ளும் சிரியாவின் இடைக்கால அதிபர்!

சிரியாவின் இடைக்கால அதிபர் முதல்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிரியா நாட்டை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவந்த அஸாத் குடும்பத்தின் ஆட்சி உள்நாட்டுப் போரின் மூலம் கவிழ்க்கப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டது.பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி, கடந்தாண்டில் எக்ஸ் தளத்தை முடக்கம் செய்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியாவின்... மேலும் பார்க்க

கென்யா: 5,000 எறும்புகள் கடத்திய 2 வெளிநாட்டவருக்கு ஓராண்டு சிறை! ரூ.6.5 லட்சம் அபராதம்!

கென்யா நாட்டில் சுமார் 5,000 எறும்புகளைக் கடத்திய வெளிநாட்டவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லார்னாய் டேவிட... மேலும் பார்க்க

பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: டிரம்ப் பேச்சால் அதிர்ந்த இணையம்!

பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் பார்க்க