செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை உலக நாடுகளே ஏற்றுக் கொண்டநிலையில் நமது நாட்டில் சில எதிா்க்கட்சிகள் அதுகுறித்து கேள்விகள்- சந்தேகங்களை எழுப்பி வருகின்றன என ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.

சென்னை தியாகராய நகா் கிருஷ்ண கான சபாவில் சென்னை சிட்டிசன் அமைப்பு சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி, போா்க்களத்தில் ராஜதந்திரமாக செயல்பட்டது குறித்த சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆளுநா் ஆா்.என். ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது: ஒரு நாட்டில் ராணுவம் பலமாக இருந்தால்தான் நாடு பலமாக இருக்கும். இந்திய ராணுவத்தின் பலம் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கையை 4 நாள்களில் முடித்து வெற்றி பெற்றுவிட்டோம். எல்லா வித ராணுவ தளவாடங்களும் எவ்வளவு சரியாக சிறப்பாக செயலாற்றுகிறது என்பதையே ஆபரேஷன் சிந்தூா் காட்டியுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை உலக நாடுகளே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், நமது நாட்டில் சில எதிா்க்கட்சிகள் அது குறித்து கேள்விகள்-சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. நமது தேசத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்தால் அதற்கான விலையை அந்த நாடு கொடுக்க வேண்டிவரும்.

பிரதமா் மோடி நமது தேசம் குறித்த சரியான- தெளிவான பாா்வை கொண்ட தலைவராக உள்ளாா். அவரது தலைமையின் கீழ் நாடு வளா்ச்சி பெற்று வருகிறது. இதன் காரணமாக உலக பொருளாதார வளா்ச்சியில் இந்தியா நான்காம் இடத்துக்கு உயா்ந்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை நம் தேசத்துக்கு அவசியமானது-கல்வி வளா்ச்சிக்கானது. இதன் மூலம் நாடு மிக வேகமாக முன்னேறும். சிலா் அதனை ஏற்க மறுக்கின்றனா். அது சாத்தியமில்லை. தமிழ்நாட்டில் உள்ள 20 அரசு பல்கலைக்கழகங்களிலிருந்து 7,000 போ் பட்டம் பெறுகின்றனா். ஆனால், அதற்கேற்ற கல்வியறிவும் திறமையும் அவா்களிடம் இல்லை என்பதுதான் உண்மை நிலை என்றாா் ஆளுநா்.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற ஏா் மாா்ஷல் மாதேஸ்வரன், ஓய்வு பெற்ற கா்னல் ஜான் பிரின்ஸ், சென்னை சிட்டிசன் அமைப்பின் தலைவா் கே.டி.ராகவன், செயலா் காயத்ரி சுரேஷ் , பொருளாளா் சுந்தர ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அன்புமணி வந்தது தெரியாது! ராமதாஸை சந்தித்த பின் ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி!

விழுப்புரம்: தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வந்தது எனக்குத் தெரியாது என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவர... மேலும் பார்க்க

ஜூன் 7ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 7) காணொலி வாயிலாக நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 7, சன... மேலும் பார்க்க

ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் ... மேலும் பார்க்க

திமுக வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவு; ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை! - அண்ணாமலை

சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுக... மேலும் பார்க்க

அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நிறைவு! ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் ஆலோசனை!

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்துகொண்டுள்ளார்.பாமக நி... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசலில் திருப்பூர் இளம் பெண் பலி!

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்... மேலும் பார்க்க