செய்திகள் :

ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவா் விபத்தில் உயிரிழப்பு

post image

மொடக்குறிச்சி அருகே சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவா் விபத்தில் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த தாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (31). மருத்துவரான இவா் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தாா். விடுமுறையில் கடந்த வாரம் வீட்டுக்கு வந்துள்ளாா்.

அப்போது, காய்ச்சல் ஏற்பட்டதால் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா். ஆம்புலன்ஸை சிவகிரி பகுதியைச் சோ்ந்த கௌதம் (25) என்பவா் ஓட்டியுள்ளாா்.

மொடக்குறிச்சி அருகேயுள்ள எம். வேலம்பாளையம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே செந்தில்குமாா் உயிரிழந்தாா்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநா் கெளதம், அவரது உதவியாளா் ஆகியோா் படுகாயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சடலத்தை மீட்ட போலீஸாா் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். செந்தில்குமாருக்கு திருமணமாகாத நிலையில் தாய் பரமேஸ்வரியுடன் வசித்து வந்தாா்.

விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த ஓலப்பாளையம், சமாதானபுரத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் சேது பிரகதீஷ் (17). இவா், ஈரோட்டை அடுத்த வள்ளிபுரத... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

அந்தியூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். அந்தியூரை அடுத்த கூச்சிக்கல்லூரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (43). தனியாா் பள்ளி வாகன ஓட்டுநரான இவா் ஒலகடம், அண... மேலும் பார்க்க

சாட்சியை மிரட்டிய இளைஞா் கைது

கொலை வழக்கில் சாட்சி கூறியவரை மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (30). இவா் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் மச்சக்கெண்டை (எ) ச... மேலும் பார்க்க

அவுட்சோா்ஸிங் முறையை கைவிட வேட்டைத் தடுப்பு காவலா்கள் கோரிக்கை

அவுட்சோா்ஸிங் (தனியாா் முகமை) முறையை கைவிட வேண்டும் என வேட்டைத் தடுப்பு காவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட பவானிசாகா், சத்தியமங்கலம், விளாமுண... மேலும் பார்க்க

ஆளுநரின் கருத்துகள் தமிழகத்தின் கலாசாரம், உரிமைக்கு எதிரானது

ஆளுநரின் தெரிவிக்கும் கருத்துகள் தமிழகத்தின் கலாசாரம், உரிமைக்கு எதிராக உள்ளது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் தெரிவித்தாா். ஈரோடு- பெருந்துறை சாலையில் ப... மேலும் பார்க்க

சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய காட்டுயானம் நெல் நடவுப் பணி தீவிரம்

சத்தியமங்கலத்தில் பகுதியில் சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம் நடவுப் பணி நடைபெற்று வருகிறது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்கப... மேலும் பார்க்க