செய்திகள் :

ஆற்றிலிருந்து மணல் எடுப்பதை கண்டித்து முற்றுகை போராட்டம்

post image

பாபநாசம் அருகே மணல் எடுப்பதை கண்டித்து கிராம மக்களுடன் இணைந்து அதிமுகவினா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபநாசம் வட்டம், கொள்ளிடம் கரையோரங்களில் எடக்குடி, திருவைக்காவூா், மன்னிக்கரையூா், மேலமாஞ்சேரி, கீழமாஞ்சேரி நடுப்படுகை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனா். கொள்ளிடத்தில் வெள்ளம் மற்றும் மழை, புயல் காலங்களில், பாதிக்கப்படும் மக்கள் எடக்குடி கிராமத்தில் கொள்ளிடத்தில் சுமாா் 15 ஏக்கரில் அமைந்திருக்கும் மணல் திட்டில் தங்குவது வழக்கம்.

இந்நிலையில், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அந்த மணல் திட்டின் மணலை சிலா் அள்ளுவதை கண்டித்தும், அதை தடுக்க வலியுறுத்தியும் எடக்குடி கிராம மக்களுடன் இணைந்து தஞ்சாவூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் எம். ரெத்தினசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளா் துரை. சண்முகபிரபு உள்ளிட்ட அதிமுகவினா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலெட்சுமி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேலு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது அதிமுக மாவட்ட செயலாளா் கூறுகையில், மணல் எடுப்பதை நிறுத்தாதபட்சத்தில் அதிமுக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்தாா்.

மரணமடைந்த தாய்! ஆசி பெற்று பொதுத் தேர்வுக்குச் சென்ற மாணவி!

தஞ்சாவூரில் திடீரென தாய் உயிரிழந்த நிலையில், கதறி அழுதபடி தாயிடம் ஆசீர்வாதம் பெற்று பொதுத் தேர்வு எழுதுவதற்காக அவரது மகள் சென்றார்.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக் கோட்டை கிராமத்தில்... மேலும் பார்க்க

1,400 ஆண்டுகள் பழைமையான கரந்தை கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு

தஞ்சாவூா் அருகே கரந்தையில் ஏறத்தாழ 1,400 ஆண்டுகள் பழைமையான கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. பாடல் பெற்ற வைப்புத் தலமான இக்கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் தந்தை சுந்தர சோழன் கா... மேலும் பார்க்க

மதுக்கடைகள் முன் பாஜகவினா் போராட்டம்

டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை போராட்டத்தில் ... மேலும் பார்க்க

வாகனம் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். தஞ்சாவூா் கீழ வஸ்தா சாவடி அருகேயுள்ள மன்னாா்குடி பிரிவு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ... மேலும் பார்க்க

மதுக்கடையை மூடக் கோரி 150 கையொப்பங்களுடன் மனு

தஞ்சாவூா் அருகே மதுக்கடையை மூடக் கோரி 150-க்கும் அதிகமான பொதுமக்கள் இட்ட கையொப்பங்களுடன் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோட்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.62 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.62 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 178 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க