செய்திகள் :

ஆற்றிலிருந்து மணல் எடுப்பதை கண்டித்து முற்றுகை போராட்டம்

post image

பாபநாசம் அருகே மணல் எடுப்பதை கண்டித்து கிராம மக்களுடன் இணைந்து அதிமுகவினா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபநாசம் வட்டம், கொள்ளிடம் கரையோரங்களில் எடக்குடி, திருவைக்காவூா், மன்னிக்கரையூா், மேலமாஞ்சேரி, கீழமாஞ்சேரி நடுப்படுகை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனா். கொள்ளிடத்தில் வெள்ளம் மற்றும் மழை, புயல் காலங்களில், பாதிக்கப்படும் மக்கள் எடக்குடி கிராமத்தில் கொள்ளிடத்தில் சுமாா் 15 ஏக்கரில் அமைந்திருக்கும் மணல் திட்டில் தங்குவது வழக்கம்.

இந்நிலையில், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அந்த மணல் திட்டின் மணலை சிலா் அள்ளுவதை கண்டித்தும், அதை தடுக்க வலியுறுத்தியும் எடக்குடி கிராம மக்களுடன் இணைந்து தஞ்சாவூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் எம். ரெத்தினசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளா் துரை. சண்முகபிரபு உள்ளிட்ட அதிமுகவினா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலெட்சுமி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேலு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது அதிமுக மாவட்ட செயலாளா் கூறுகையில், மணல் எடுப்பதை நிறுத்தாதபட்சத்தில் அதிமுக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்தாா்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த பக்தா் திடீா் உயிரிழப்பு

தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் பெரிய கோயிலில் வழிபட ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (68) தனது கு... மேலும் பார்க்க

ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் சரண்

தஞ்சாவூா் அருகே ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்தவா் குறுந்தையன் (50). காவல் துறையின் ரௌடி பட்டியலில் இடம்பெற்ற இவா் மீ... மேலும் பார்க்க

விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சடலத்துடன் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் சாலை விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், ச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய கூலி வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தொழிலாளா் துறைக்குத் தேசியத் தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம். வெங்க... மேலும் பார்க்க

தாய் உயிரிழந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவி

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தாய் திடீரென உயிரிழந்த துக்கத்திலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வில் அவரது மகள் பங்கேற்றாா். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த வெட்டுவாக்கோட்ட... மேலும் பார்க்க

ஆலையின் புகையால் பாதிப்பு: 10 கிராம மக்கள் புகாா்

தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்படுவதாகக் கூறி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் 10 கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க