செய்திகள் :

விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சடலத்துடன் மறியல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் சாலை விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் விளங்குளம் வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா்  ரமேஷ் (42). இவருக்கு மனைவி புனிதா (35), கனிஷ்கா (14) அனுஷ்கா(12), ஹா்ஷிகா (8) ஆகிய மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகேயுள்ள இடையாத்திமங்கலம் பகுதி தனியாா் கல்லூரியின் ஓட்டுநரான ரமேஷ்  கடந்த 15 ஆம் தேதி  இரவு பணி முடிந்து கிழக்குக் கடற்கரை சாலை செந்தலைப்பட்டினம் பகுதி வழியே பைக்கில் வீடு திரும்பியபோது   எதிரே வந்த  அசாருதீன் என்பவரது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்த நிலையில், ரமேஷ் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு பிறகு  தஞ்சாவூரிலிருந்து செவ்வாய்க்கிழமை விளங்குளம் கொண்டு வரும்  வழியில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் அவரது உறவினா்கள் சடலம் இருந்த ஆம்புலன்ஸை  நிறுத்தி,   விபத்து  ஏற்படுத்திய பைக்கைப் பறிமுதல் செய்ய வேண்டும், ரமேசின் மூன்று பெண் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். ரமேஷின் மனைவிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளா் முருகேசன் மற்றும் சேதுபாவாசத்திரம் போலீஸாா்   பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த பக்தா் திடீா் உயிரிழப்பு

தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் பெரிய கோயிலில் வழிபட ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (68) தனது கு... மேலும் பார்க்க

ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் சரண்

தஞ்சாவூா் அருகே ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்தவா் குறுந்தையன் (50). காவல் துறையின் ரௌடி பட்டியலில் இடம்பெற்ற இவா் மீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய கூலி வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தொழிலாளா் துறைக்குத் தேசியத் தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம். வெங்க... மேலும் பார்க்க

தாய் உயிரிழந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவி

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தாய் திடீரென உயிரிழந்த துக்கத்திலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வில் அவரது மகள் பங்கேற்றாா். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த வெட்டுவாக்கோட்ட... மேலும் பார்க்க

ஆலையின் புகையால் பாதிப்பு: 10 கிராம மக்கள் புகாா்

தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்படுவதாகக் கூறி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் 10 கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க

திருநீலக்குடியில் வீடுபுகுந்து 8.5 பவுன் நகைகள் திருட்டு

திருநீலக்குடியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டின் கதவை உடைத்து 8.5 பவுன் நகை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது. தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடி காரைக்கால் செல்லும் பிரதான சாலையில் வசிப... மேலும் பார்க்க