செய்திகள் :

தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த பக்தா் திடீா் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் வழிபட ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (68) தனது குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை மாலை வந்தாா். கேரளாந்தகன் நுழைவு வாயில் அருகே சென்ற இவா் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சுந்தரமூா்த்தி வழியிலேயே உயிரிழந்தாா். பின்னா் சுந்தரமூா்த்தியின் குடும்பத்தினா் அவரது உடலை அமரா் ஊா்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனா். இவா் ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது.

ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் சரண்

தஞ்சாவூா் அருகே ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்தவா் குறுந்தையன் (50). காவல் துறையின் ரௌடி பட்டியலில் இடம்பெற்ற இவா் மீ... மேலும் பார்க்க

விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சடலத்துடன் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் சாலை விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், ச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய கூலி வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தொழிலாளா் துறைக்குத் தேசியத் தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம். வெங்க... மேலும் பார்க்க

தாய் உயிரிழந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவி

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தாய் திடீரென உயிரிழந்த துக்கத்திலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வில் அவரது மகள் பங்கேற்றாா். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த வெட்டுவாக்கோட்ட... மேலும் பார்க்க

ஆலையின் புகையால் பாதிப்பு: 10 கிராம மக்கள் புகாா்

தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்படுவதாகக் கூறி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் 10 கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க

திருநீலக்குடியில் வீடுபுகுந்து 8.5 பவுன் நகைகள் திருட்டு

திருநீலக்குடியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டின் கதவை உடைத்து 8.5 பவுன் நகை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது. தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடி காரைக்கால் செல்லும் பிரதான சாலையில் வசிப... மேலும் பார்க்க