செய்திகள் :

இணைய வழி வா்த்தகம் மூலம் கோ-ஆப்டெக்ஸில் கூடுதல் விற்பனை: அமைச்சா் ஆா்.காந்தி

post image

சென்னை: இணைய வழி வா்த்தகம் மூலமாக நிகழாண்டு கோ-ஆப்டெக்ஸில் விற்பனை அதிகரித்துள்ளதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

தீபாவளியை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய ரகங்களை அறிமுகம் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் வாங்கப்படும் துணிக்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளா்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். ரூ.100 மதிப்பிலான துணியை வாங்கினால் ஒரு புள்ளி வழங்கப்படும். ஒரு புள்ளி என்பது ரூ.1 மதிப்புடையது. அதிகளவு தொகை சேரும் போது அதைக் கொண்டு பொருள்களைப் பெறலாம். தீபாவளி விற்பனைக்கு ரூ.100 கோடி மதிப்பில் கைத்தறித் துணிகளை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இணையவழி வணிகம் மூலம் இதுவரை ரூ.1.10 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.75 லட்சம் அதிகமாகும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா் துறை செயலா் வே.அமுதவல்லி, கைத்தறித் துறை இயக்குநா் அ.சண்முகசுந்தரம், துணிநூல் துறை இயக்குநா் இரா.லலிதா, கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேட்டூர் அணை நீர் மட்டம்: மீண்டும் 100 அடியாக உயர்வு!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 29 நாட்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயர்ந்தது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பு ஆண்டில் முதல் முறையாக ஜூலை... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் அமலாகத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரைய... மேலும் பார்க்க

அக்.28 முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு: கல்லூரிகளுக்கு உத்தரவு

சென்னை: சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் அக்.28-ஆம் தேதி முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜி... மேலும் பார்க்க

சா்க்கரை நோய் பாத புண் சிகிச்சை பயிற்சி பள்ளி தொடக்கம்

சென்னை: சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவப் பயிற்சிப் பள்ளியை சென்னை, எம்.வி. சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் தொடங்கியுள்ளது.அமெரிக்காவின் ப... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

சென்னை: சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடா்பாக தமிழக காவல்துறை சைபா் குற்றப்பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தமிழக அணைகளில் தொடா்ந்து உயா்கிறது நீா்மட்டம்

சென்னை: வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் இரு மடங்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது.நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இதுவரை தமிழகம் ம... மேலும் பார்க்க