செய்திகள் :

இந்தியாவின் ஆக்கப்பூர்வமான சக்திகள் நீங்கள்தான்! தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினருக்கு ராகுல் புகழாரம்

post image

இந்திய நாட்டின் ஆக்கப்பூர்வமான சக்திகளாக தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் விளங்குவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

புது தில்லியில் நடைபெற்ற காங்கிரஸின் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான(ஓபிசி) தலைமைத்துவ மாநாட்டில் ராகுல் காந்தி பேசியதாவது: “இந்திய நாட்டின் ஆக்கப்பூர்வமான சக்திகளாக தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் விளங்குகிறார்கள். ஆனால், இந்த மக்களுக்கு அவர்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை. ஓபிசி பிரிவினரின் வரலாற்றை ஆர்எஸ்எஸ், பாஜக அழித்துவிட்டது.

தெலங்கானாவில் எந்தவொரு ஓபிசி, தலித், பழங்குடியினரும் கார்ப்பரேட் நிறுவனம் அளவுக்கு சம்பளம் பெறவில்லை. அவர்கள் எல்லாம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பியே வாழ்கின்றனர்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படாதிருந்ததற்கு நானே முக்கிய காரணம், அதற்கு காங்கிரஸ் பொறுப்பாகாது. இந்தநிலையில், காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு விரிவாக எடுக்கப்படும்.

ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்காமல் சில காலம் நான் பின்தங்கிவிட்டேன். அதற்கான முக்கியத்துவத்தை அளிக்காமல் விட்டுவிட்டேன். இதற்காக வருந்துகிறேன். நாட்டின் ஆக்கப்பூர்வ சக்திகளுக்கு மரியாதை தர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்” என்றார்.

OBCs, Dalits, tribals are country's productive force, but they are not getting fruits of their labour: Rahul Gandhi

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைப் போக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.ஆந்... மேலும் பார்க்க

அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்: சுப்ரியா சுலேரவி கிஷன்நிஷிகாந்த் து... மேலும் பார்க்க

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க

ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எ... மேலும் பார்க்க