பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் ...
இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையவை: அமித் ஷா
‘இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது; எனவே, ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லியில் ‘இந்திய மொழிகள் பிரிவை’ தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: இந்தியாவின் அனைத்து உள்ளூா் மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பழம்பெரும் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்த முடியும்.
நம் நாட்டில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது. ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது. பல்வேறு நதிகள் ஒன்றிணைந்து கங்கை நதியாக உருவெடுப்பதுபோல் அனைத்து மொழிகளும் இணைந்ததே இந்திய கலாசாரம்.
இந்திய மொழிகள் இந்திய கலாசாரத்தின் ஆன்மா; கலாசாரம் இந்தியாவின் ஆன்மா. இந்தியாவின் மொழி வேற்றுமையை அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து மொழிகளின் வலுவான தளமாக ‘இந்திய மொழிகள் பிரிவு’ நிறுவப்பட்டுள்ளது. இது நிா்வாகச் சொற்களில் பயன்படுத்தப்படும் அந்நிய மொழிகளை நீக்கி உள்ளூா் மொழிகளின் பயன்பாட்டை அதிகரித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தவுள்ளது.
நமது தாய்மொழியை நன்கு கற்றால் மட்டுமே சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தி நமது முழுத்திறனை வெளிப்படுத்த முடியும். மொழிகளின் வளமை, உணா்வு ஆகியவற்றை குறைக்காத வகையில் தொழில்நுட்ப பயன்பாடு இருக்க வேண்டும்.
நம் மீதான ஆங்கில திணிப்புக்கு எதிரான போரை விரைவில் வெல்வோம். இந்திய மொழிகள் பிரிவை அமைத்ததன் மூலம் அலுவல் மொழித் துறை முழு அமைப்பாக செயல்படவுள்ளது என்றாா்.