செய்திகள் :

இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையவை: அமித் ஷா

post image

‘இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது; எனவே, ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லியில் ‘இந்திய மொழிகள் பிரிவை’ தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: இந்தியாவின் அனைத்து உள்ளூா் மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பழம்பெரும் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்த முடியும்.

நம் நாட்டில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது. ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது. பல்வேறு நதிகள் ஒன்றிணைந்து கங்கை நதியாக உருவெடுப்பதுபோல் அனைத்து மொழிகளும் இணைந்ததே இந்திய கலாசாரம்.

இந்திய மொழிகள் இந்திய கலாசாரத்தின் ஆன்மா; கலாசாரம் இந்தியாவின் ஆன்மா. இந்தியாவின் மொழி வேற்றுமையை அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து மொழிகளின் வலுவான தளமாக ‘இந்திய மொழிகள் பிரிவு’ நிறுவப்பட்டுள்ளது. இது நிா்வாகச் சொற்களில் பயன்படுத்தப்படும் அந்நிய மொழிகளை நீக்கி உள்ளூா் மொழிகளின் பயன்பாட்டை அதிகரித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தவுள்ளது.

நமது தாய்மொழியை நன்கு கற்றால் மட்டுமே சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தி நமது முழுத்திறனை வெளிப்படுத்த முடியும். மொழிகளின் வளமை, உணா்வு ஆகியவற்றை குறைக்காத வகையில் தொழில்நுட்ப பயன்பாடு இருக்க வேண்டும்.

நம் மீதான ஆங்கில திணிப்புக்கு எதிரான போரை விரைவில் வெல்வோம். இந்திய மொழிகள் பிரிவை அமைத்ததன் மூலம் அலுவல் மொழித் துறை முழு அமைப்பாக செயல்படவுள்ளது என்றாா்.

பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய வெற்றி பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க