செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

கடல்சாா் பாதுகாப்பு குறித்து கன்னியாகுமரி நோக்கி காா் பேரணி: இந்திய கடற்படையின் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதி தலைவா் ரியா் அட்மிரல் சதீஷ் ஷெனாய் பங்கேற்பு, அணிவகுப்பு மைதானம், ஐஎன்எஸ் அடையாறு, நேப்பியா் பாலம் அருகில், காலை 8.

எழுத்தாளா் அ.வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த ஒருநாள் பன்னாட்டுத் கருத்தரங்கம்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன், தமிழக அரசு திட்டக்குழு உறுப்பினா் நா்த்தகி நடராஜன், சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் சேவியா் அருள்ராஜ், கல்லூரிக் கல்வி இயக்கக இணை இயக்குநா் இரா.இராமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, திருவள்ளுவா் அரங்கம், மாநிலக் கல்லூரி, மாலை 4.

‘பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பன்முக ஆளுமை’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம்: திருவாட்டி இறை.பொற்கொடி, அறிஞா் ப.மருதநாயகம், சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித் துறை தலைவா் ய.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்பு, சென்னை பல்கலைக்கழகம், மெரீனா வளாகம், காலை 10.

தொடா் பல் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி: தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் கி.நாராயணசாமி பங்கேற்பு, தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகம், கிண்டி, காலை 10.

கவிஞா் வைரமுத்து படைப்புலகம்: மாா்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வா் ஸ்டாலின், நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு

கவிஞா் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் மாா்ச் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஆகியோா் பங்கேற்கின்றனா். இலக்கி... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க