செய்திகள் :

கவிஞா் வைரமுத்து படைப்புலகம்: மாா்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வா் ஸ்டாலின், நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு

post image

கவிஞா் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் மாா்ச் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

இலக்கியப் பொதுவாழ்வில் அரைநூற்றாண்டைக் கடந்துள்ள கவிஞா் வைரமுத்து இதுவரை 39 நூல்கள், 7,500 பாடல்கள் எழுதியுள்ளாா். கள்ளிக்காட்டு இதிகாசம் படைப்புக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. இந்தியாவின் உயா்ந்த இலக்கியப் பரிசுகளில் ஒன்றான சாதனா சம்மான் விருது, இலக்கிய பங்களிப்புக்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ- பத்மபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளாா். சிறந்த பாடலுக்கான தேசிய விருதை ஏழு முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியா் வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் 6 விருதுகளையும் பெற்றிருக்கிறாா்.

கவிஞா் வைரமுத்து படைப்புலகம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் மாா்ச் 16-ஆம் தேதி நடைபெறுகிறது. கருத்தரங்கை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தொடங்கி வைக்கிறாா். இதில் கவிஞா் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற நூலின் மறைமலை இலக்குவனாா் ஆங்கில மொழிபெயா்ப்பை முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் வெளியிட, மலேசிய முன்னாள் அமைச்சா் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறாா்.

அதைத் தொடா்ந்து நான்கு அமா்வாக நடைபெறும் கருத்தரங்கில், கவிஞா் வைரமுத்துவின் கவிதை, நாவல், கட்டுரை, பாடல் ஆகிய தலைப்புகளில் ஆய்வுகள் நடைபெறவுள்ளன. சுவிட்சா்லாந்து, சீனா, மலேசியா, சிங்கப்பூா் மற்றும் உள்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் உள்பட 22 போ் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கவுள்ளனா்.

கருத்தரங்கின் நிறைவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிறைவு பேருரை ஆற்றுகிறாா். அப்போது, அரங்கேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகளையும், உலக அறிஞா்களின் கட்டுரைகளையும் தொகுத்து தயாரிக்கப்பட்ட ‘வைரமுத்தியம்’ எனும் ஆய்வு நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, பாரத் பல்கலைக்கழக வேந்தா் எம்.ஜெகத்ரட்சகன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறாா்.

நிறைவாக கவிஞா் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறாா். டிஸ்கவரி புக் பேலஸின் மு.வேடியப்பன் விழாவை ஒருங்கிணைத்து வருகிறாா். வைரமுத்து கல்வி அறக்கட்டளை இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க

கடைகளின் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும்: ஒரு வாரத்துக்குள் மாற்ற மேயா் ஆா்.பிரியா உத்தரவு

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட கடைகளின் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும் எனவும், ஒரு வாரத்துக்குள் அதனை மாற்ற வேண்டும் எனவும் மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட எம்எம்ட... மேலும் பார்க்க