செய்திகள் :

இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

post image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் குற்றம்சாட்டினாா். இதற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், தயாநிதி மாறன் தொகுதி நிதியை முறையாகச் செலவிடவில்லை என நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையிலேயே தோ்தல் பிரசாரத்தின்போது பேசியதாகவும், இது அவதூறாகாது என்பதால் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு எதிராக அரசு இணையதளங்களில் உள்ள தரவுகளின் அடிப்படையிலும், நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையிலுமே மனுதாரா் அவ்வாறு பேசினாா். மற்றபடி அவா் வேறு எந்த அவதூறு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்றாா்.

பதிலுக்கு தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், தயாநிதி மாறன் தொடா்பான அந்தச் செய்திக்கு சம்பந்தப்பட்ட நாளிதழ் வருத்தம் தெரிவித்துவிட்ட நிலையில், தோ்தல் நேரத்தில் மனுதாரா் வேண்டுமென்றே தயாநிதி மாறன் மீது குற்றம்சாட்டி பேசியது அவதூறானது என வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் தயாநிதி மாறன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தாா்.

வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரைய... மேலும் பார்க்க

உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.வேளாண்மை மற்றும் உ... மேலும் பார்க்க

பட்ஜெட்: 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு!

தமிழகத்தில் விளையும் 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் ... மேலும் பார்க்க

நத்தம் புளி உள்பட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்: வேளாண் பட்ஜெட்

சென்னை: வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

பாசனக் கிணறு, சூரிய சக்தி பம்பு செட், உழவர் சந்தை: வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்

தமிழகத்தில் உள்ள பாசனக் கிணறுகளை சீரமைத்தல், சூரிய சக்தி பம்பு செட் அமைத்துத் தரப்படும், உழவர் சந்தைகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன... மேலும் பார்க்க

மதுரை மல்லிகை சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு!

மதுரை மல்லிக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகை செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை ... மேலும் பார்க்க