செய்திகள் :

பட்ஜெட்: 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு!

post image

தமிழகத்தில் விளையும் 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடுபெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அப்போது பேசிய அவர்,

"நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடுபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிதாக இந்த 5 விளைபொருளுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான 'டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி' உருவாக்கப்படும்" என்றார்.

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகாக கூடுதல் வாகனம் நிறுத்துமிடம் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்திசெய்ய... மேலும் பார்க்க

முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழல்: எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? சீமான் கேள்வி

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு ... மேலும் பார்க்க

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை: வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என்று வேளாண் பட்ஜெட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்ட... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்த இருசக்கர வாகனம்: 2 வட மாநில இளைஞர்கள் காயம்

சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி இருசக்கர வாகனம் தீப்பிடித்த சம்பவத்தில் இரு வடமாநில இளைஞர்கள் காயமடைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் இருந்து கலங்கல் செல்லும் சாலையில் கு... மேலும் பார்க்க

அவியல் கூட்டுபோல இருக்கும் வேளாண் பட்ஜெட்! - இபிஎஸ் கடும் விமர்சனம்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக அரசு வல்லவர்கள் என்பதற்கு இந்த வேளாண் பட்ஜெட் ஒரு சான்றாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.2025 - 2026 ஆம் நிதியாண்டுக்... மேலும் பார்க்க