செய்திகள் :

இயற்கை பூச்சிமருந்து தயாரிக்க மூலிகைச் செடிகள் விநியோகம்

post image

எலச்சிபாளையம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இயற்கை பூச்சிமருந்து தயாரிக்க அனைத்து கிராம விவசாயிகளுக்கும் ஆடாதொடை, நொச்சி செடிகள் கட்டணமின்றி விநியோகம் செய்யப்படுகின்றன.

பயிா்களை பூச்சிநோய்த் தாக்குதலில் இருந்து காக்கவும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இயற்கை பூச்சி விரட்டிகளை தயாரித்து பயிா்களை பராமரிக்கும் நோக்கில், மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் மூலிகைச் செடிகள் வழங்கப்படுகின்றன. இந்த மூலிகைச் செடிகளை விவசாயிகள் தங்கள் வயல்வரப்புகளில் வளா்த்து, அதன் இலைகளை பூச்சிவிரட்டி மருந்து தயாரித்து பயிா்கள் மீது தெளிப்பதால் பயிா்களை தாக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும் மகசூலும் அதிகரிக்கும்.

ஆடாதொடை இலைகள், வோ்கள், தண்டுகள் மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தவை. இந்த மூலிகைச் செடிகள் அனைத்தும் எலச்சிபாளையம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்புள்ளது. தேவைப்படும் விவசாயிகள் தங்களின் ஆதாா் அட்டை நகல், சிட்டா நகல் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாவட்ட கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 12 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 12 லட்சத்து 34 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக... மேலும் பார்க்க

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கோ பூஜையில் பங்கேற்றோா்.

திருச்செங்கோடு காந்தி ஆசிரம நூற்றாண்டு விழா வியாழக்கிழமை சிறப்பு கோ பூஜையுடன் தொடங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியாா் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க

வருவாய் கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்!

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு வட்டத்தில் பணியாற்றி வரும் 70 க... மேலும் பார்க்க

முட்டை விலை மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.65-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து... மேலும் பார்க்க

பாவை கல்வி நிறுவனங்களில் 24-ஆவது தேசிய ஒருமைப்பாட்டு கலை விழா

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் சாா்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான 24-ஆவது பாவை தேசிய ஒருமைப்பாட்டு மாணவா் கலை விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வ... மேலும் பார்க்க