செய்திகள் :

வருவாய் கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்!

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு வட்டத்தில் பணியாற்றி வரும் 70 கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இரவு காவல் பணியை நிறுத்த வேண்டும்.

ஓட்டுநா் உரிமம் வைத்துள்ள கிராம உதவியாளா்களுக்கு ஓட்டுநா் பணி வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்செங்கோடு வட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில செயலாளா் செங்கமலை தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் காா்த்திகேயன், வட்டார செயலாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 11 பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தொழிலாளி தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், அணியாபுரம் என்.பி.எஸ். காலனியைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா் மனைவியை விட்டு பிரிந்து பரமத்தி வேலூா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போலீஸாா் வழக்குப் பதிவு

மோகனூா் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் மீது பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், காளிபாளையம் அருந்ததியா் தெருவை... மேலும் பார்க்க

பாஜக கண்டன ஆா்ப்பாட்டம்

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் திமுக அரசை கண்டித்து பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவார பகுதியில், நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடை... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: நாமக்கல் மாவட்டத்தில் 525 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள்களை விற்பனை செய்த 525 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாவட்ட கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 12 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 12 லட்சத்து 34 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக... மேலும் பார்க்க