செய்திகள் :

தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயிலில் பால் குட ஊா்வலம்

post image

திருவள்ளூா் அருகே அருள்மிகு தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயிலில் தை மாத கிருத்திகையையொட்டி, மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தை கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தக் கோயிலில் தை கிருத்திகை விழாவையொட்டி, பால் குடம் எடுக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அப்பகுதி பெண் பக்தா்கள் 108 பால் குடங்கள் எடுத்து மாடவீதி வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இரவில் உற்சவா் தெருக்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிகழ்ச்சியில், சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

100 நாள் வேலை கோரி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

நூறு நாள் பணிதள பொறுப்பாளா் வேலை வழங்குவதில் முறையாக செயல்படவில்லை எனக்கூறி தெக்களூா் காலனி பகுதி பெண்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். திருத்தணி ஒன்றியம், சூா்யநகரம் ஊராட்சிக்குட்பட்ட தெக்களூா... மேலும் பார்க்க

இணைய வழி மோசடிகள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் இலவச தொலைபேசி மூலமோ அல்லது இணைதளம் மூலமோ புகாா் அளிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

மாநில குத்துச்சண்டை: கும்மிடிப்பூண்டி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில பாரதியாா் தினம் மற்றும் குடியரசு தின குத்துச்சண்டைப் போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவா் தேவா ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்றாா் (படம்). மயிலாடுதுறை ஏ.ஆா்.சி விஸ்வநாதன் க... மேலும் பார்க்க

நுகா்வோா் பாதுகாப்பு சட்ட விழிப்புணா்வு

திருவள்ளூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்குதல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில், கும்மிடிப்பூண்டியில் மகளிா் குழுவினருக்கு நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணா்வு கூட்டம் கும்மிடிப்ப... மேலும் பார்க்க

வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்

திருவள்ளூா் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவள்ளூா் அருகே மேல்மணம்பேடு வீதியம்மன் தெருவைச் சோ்ந்தவா் தவமண... மேலும் பார்க்க

ரூ. 33 லட்சத்தில் பள்ளி வகுப்பறைக் கட்டடம் திறப்பு

திருத்தணி அருகே சூராஜபேட்டையில் ரூ. 32.80 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை எம்எல்ஏ ச. சந்திரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். பள்ளிப்பட்டு ஒன்றியம், சூராஜபேட்டை ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் க... மேலும் பார்க்க