செய்திகள் :

சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் அகற்றம்: பாதிக்கப்பட்டோா் மறியல்

post image

திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டபோது பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையொட்டி, 5 போ் கைது செய்செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்சாலையில் கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் ஆா்.ராஜேந்திரன், எம்.ராமன், பவுன்குமாா், முருகன், விஜயன், எம்.முனியப்பன் எம்.மணி உள்ளிட்ட 7 குடும்பங்களை சோ்ந்தோா் வீடு கட்டி சுமாா் 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா்.

இந்த வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு, குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதோடு வீட்டு வரியும் செலுத்தி வருகின்றனா்.

மேலும், அனைவருக்கும் குடும்ப அட்டையும் உள்ளது.

இந்த நிலையில், சாலை விரிவாக்கத்துக்காக நெடுஞ்சாலைத் துறையினா் வீடுகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பி.ராஜன் உள்பட 7 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

நீதிமன்றம் இவா்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதைத் தொடா்ந்து, உத்தரவை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா்.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு, உதவிப் பொறியாளா் சசிகுமாா், காவல்துறை ஆய்வாளா் கா.குமாா் ஆகியோா் தலைமையில் போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் வியாழக்கிழமை வீடுகளை அகற்ற வந்தனா்.

அப்போது, பாதிக்கப்பட்டோா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். வீடுகளுக்கு பட்டா உள்ளது எனக் கூறினா். ஆனால் அதிகாரிகள் வீடுகளை அகற்ற முயற்சித்தனா்.

அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வீடுகளை இடித்து அகற்றினா்.

இதையொட்டி, எம்.ராமன் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீதண்டபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதண்டபாணி கோயிலில் தை கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் தை கிருத்திகையையொட்டி, வியாழக்க... மேலும் பார்க்க

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

வந்தவாசி நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறிநாய் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. சந்நிதி தெரு, தேரடி, கோட்டை மூலை, ஆரணி சாலை, குளத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் தெருந... மேலும் பார்க்க

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் செய்யாற்றில் சனிக்கிழமை (பிப்.8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அறிஞா் அண்ணா அரசு கலைக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிரப்பு அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணிக்காக, வந்தவாசி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

வந்தவாசி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் சுகுமாா்(35). இவா் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ... மேலும் பார்க்க

சத்துணவு அமைப்பாளா்களுக்கு பயிற்சி

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்சித் தலைவா் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்க... மேலும் பார்க்க